Latest Event Updates

முஹம்மது : நான் தான் அல்லாஹ்

Posted on Updated on

 

அபு ஹுரைரா அறிவித்தார்கள் :     allahMo

“நபியவர்கள் கூறினார்கள் : எவர் ஒருவர்  எனக்கு கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறார், எவர் ஒருவர் எனக்கு கீழ்படியவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படியவில்லை (சஹீஹ்).”

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ ‏”‏ ‏.

ஆதாரம் : இப்னு மஜா, வால்யூம் 1, நூல் 1, ஹதீத் 3.

மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 2

Posted on Updated on

ajmal-qadri

மௌலானா  அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு இரண்டாவது மின்னஞ்சல் – பாகம் 2

17/11/2007

மௌலானா அஜ்மல் காத்ரி  

திரு அலி,

முதலில் நான் வேண்டிக்கொள்ள விரும்புவது, முஹம்மது நபியை (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தியும் ஆசியும் உண்டாகட்டும்) பற்றி அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவதை  நிறுத்துங்கள்  என்பதுதான்… நீங்கள் மனிதத்தை மதிப்பதாக இருந்தால், நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணர்வுகளுக்கு  நீங்கள் மதிப்பும் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்.

அன்பார்ந்த மௌலானா,

நான் முஹம்மதுவை அவமதிக்கவில்லை. நான் அவருக்கு எதிராக குற்றசாட்டுகளை வைக்கிறேன். முஹம்மது திருடராகவும், வெகுஜன படுகொலைகாரராகவும், கற்பழிப்பவராகவும் இருந்தார் என்று நான் கூறினால், நான்  ஹதீத், சீறா  மற்றும் குர்ஆனை ஆதாரங்களாக பயன்படுத்தி என்னுடைய உரிமைகோரல்களை   நிரூபிக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகளை  பொய்யென்று நிரூபிப்பது உங்களை சார்ந்தது.

நம்பிக்கைகள் என்பதைப்பற்றி சொல்வதென்றால், நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று யார் சொன்னது? நம்பிக்கை கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள்(நஜீஸ்);  அவர்களை சிலுவையில் அறையுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளை வெட்டுங்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய எதிரிகள், அவர்கள் நரகத்தின் எரிபொருள் ஆவார்கள் என்று கூறுகிற ஒரு மதத்தை எவரும் ஏன் மதிக்க வேண்டும்? நான் நம்பிக்கை கொள்ளாவதன் என்பதால் இது எனக்கு அவமரியாதை. எனக்கு எதிரான ஒரு அவமரியாதையை நான் ஏன் மதிக்க வேண்டும்?

மனிதர்களுடைய நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்று நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். அது மடத்தனமானது. எந்த நம்பிக்கையையும், நம்முடைய சொந்த நம்பிக்கையையும் கூட நாம் மதிக்க வேண்டியதில்லை. நாம் எப்பொழுதுமே நம்பிக்கைகளை குறித்து கேள்வி கேட்க வேண்டும். மனிதர்கள் வளர்ச்சி அடைவதற்கு இது ஒன்றே வழி. நாம் நம்பிக்கைகளை மதித்து, அவைகளை குறித்து கேள்வி கேட்கவில்லை என்றால், அவைகளுக்கு சவால் விடவில்லை என்றால், பொய்யான நம்பிக்கைகளை நாம் எப்படி விட்டொழிக்கப் போகிறோம்?

மேலும், மற்றவர்களுடைய நம்பிக்கைகளை முஸ்லிம்கள் மதிக்கிறார்களா? அவர்கள் எங்கெல்லாம் பெருவாரியாக இருந்து அவர்களுடைய கை ஓங்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பது, பஹாய்களையும்(Bahais) சீக்கியர்களையும் அஹ்மதிகளையும் ஹிந்துக்களையும் கொலை செய்வது என்பது ஏன்? முஸ்லிம்கள் தினந்தோறும் ஓதுகின்ற சூரா பாத்திஹா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவமரியாதை இல்லையா? முஸ்லிம்களை மறந்து விடுங்கள். முஹம்மது அவருடைய காலத்து மக்களின் நம்பிக்கையை மதித்தாரா? அவர் கஅபாவை உடைத்து உட்புகுந்து அந்த கோயிலை ஏன் அழித்தார்? அது அரபுகளுடைய மதத்தின் புனிதத்தை மிக அவமரியாதை படுத்தியது இல்லையா? அவர் தன்னுடைய பள்ளிவாசலை வேறு எங்காவது ஆரம்பித்து இருக்க முடியும். ஏன்  அவர் மக்களின் தெய்வங்களை தாக்கி அவமரியாதை படுத்த வேண்டும்? மற்ற முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை அவர் ஏற்படுத்தினார். விளைவாக, அவர் இருந்ததை போலவே, அவரை பின்பற்றுபவர்களும் துஷ்டர்களாகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகிறார்கள்; மதத்திலிருந்து வழி தவறியவர்கள் என்று ஒருவரை ஒருவர் கூறுகிறார்கள்; ஒருவரை ஒருவர் கொலை செய்கிறார்கள். அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் கைகளில் போர்களில் கொல்லப்பட்டதைவிட அதிகமாக, சொந்த மதப்பிரிவு சண்டைகளில், சொந்த முஸ்லிம்களின் கைகளில்தான் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கொல்லுதல் என்பது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உங்களுடைய நம்பிக்கையை மதிக்கும்படி மற்றவர்களை நீங்கள் கேட்டுக்கொள்ளும்போது, மற்றவர்களுடைய நம்பிக்கைகளை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதை தயவுகூர்ந்து ஆழ்ந்து பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் மற்ற மதங்களுக்கு வழங்குவதைக் காட்டிலும் மிக அதிகமான சுதந்திரத்தையும் உரிமைகளையும் முஸ்லிமல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள். ஷரியத்தை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட வேண்டும் என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். மனிதர்களுடைய நம்பிக்கையை இப்படிதான் நீங்கள் மதிக்கிறீர்களா? நீங்கள் ஒரு மரியாதையையும் கொடுக்காதபோது, நீங்கள் மட்டும் மரியாதையை கேட்கிறீர்கள்.

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் இறுதியான, வல்லமையான தூதர். சரியானது, தவறானது என்பதை குறித்து தீர்ப்பளிப்பதற்கு  குர்ஆனே அளவுகோல்(புர்கான்). குர்ஆனால் வழங்கப்படும் நம்பிக்கை(ஈமான்) எனும் அளவுகோல் எதுவானாலும் அது இறுதித்தூதரின் உம்மதிற்கே(சமுதாயம்) கொடுக்கப்படுகிறது என்பதை குறித்து உங்களுடைய மனதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நல்லது, நான் அதை சந்தேகிக்கிறேன். அதனால்தான் இந்த உரிமைகோரலை தர்க்கப்பூர்வமான வழியில் நிரூபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு கூறுவதினாலேயே நான் நம்பிவிட மாட்டேன்.  அந்த உரிமைகோரல்களுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? மேலும் முஹம்மது அவ்வாறு கூறுவதினாலேயும் நான் நம்பிவிட மாட்டேன். எனக்கு ஆதாரம் தேவை. முஸ்லிம்கள் ஆதாரத்தை உரிமைகோரலோடு போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். எந்த ஆதாரத்தையும் கொடுப்பதிற்கு பதிலாக, ஒரு பொய்யை அடித்துக் கூறினால் அது உண்மை ஆகிவிடும் என்பதைப்போல, அவர்கள் உரிமைகோரலையே  திருப்பித் திருப்பி கூறுகிறார்கள்.

நான் உங்களுடன் தர்க்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட மாட்டேன். ஏனெனில், சுத்தமான தர்க்க அறிவு(pure logic) உங்களை சந்தேகவாதத்தையோ (Agnotism) அல்லது நாத்திகத்தையோ நோக்கி வழிநடத்தி செல்லும். நீங்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கைக் கொண்டு, உங்களுடைய இதயத்தை உங்களுடைய பகுத்தறிவு பின்பற்றும்படி அனுமதிக்காத பட்சத்தில் அது உங்களை எப்பொழுதும் தவறாகவே வழிநடத்தி செல்லும்… ஏனெனில் ஆத்மாவின் உறவு இதயத்தோடுதான் உள்ளது. ஆத்மாவானது தன்னுடைய சொந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது(அதனுடைய சொந்த கண்கள், காதுகள், முதலியன). சூரா பக்கராவில் கூறப்படுவதைபோல், குர்ஆன் முஹம்மது(ஸல்) நபியின் இதயத்தில் வெளிப்படுத்தப்பட்டது… அதனால்தான் எவருடைய ஆத்மாக்கள் செத்துவிட்டனவோ அவர்களை அல்லாஹ் “செவிடர்கள், ஊமைகள்” என்று விளிக்கிறான்.

அது ஒரு வல்லமையான அறிக்கைதான். தர்க்க அறிவு சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லுமென்றால், கடவுளிடம் நம்பிக்கை கொள்வது தர்க்க அறிவுக்கு புறம்பானது என்று அதற்கு பொருள் ஆகாதா? கடவுள் கொடுக்கவில்லை என்றால், மனிதர்களாகிய நமக்கு நம்முடைய மூளையை யார் கொடுத்தது? நம்முடைய மூளையை பயன்படுத்துவது ஏன் சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லும்? கலீலேயோ குறிப்பிட்டது போல், நம்முடைய மூளையை பயன்படுத்துவதை கடவுள் விரும்பவில்லை என்றால், ஏன் அதை அவர் நமக்கு தர வேண்டும்? கடவுளை கண்டடைய தர்க்க அறிவை நாம் பயன்படுத்தக்  கூடாது என்றால், நாம் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?

தங்களுடை பொய்களால் எண்ணற்ற மக்களை ஏமாற்றி அவர்களிடம் உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; பகுத்தறிவு சிந்தனையை முயற்சி செய்யாதீர்கள்; தர்க்க அறிவை பயன்படுத்தாதீர்கள்; வெறுமனே நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுடைய இதயத்தை திறந்து நாங்கள் சொல்கிற எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக நம்புங்கள்; ஏனென்றால் இந்த மூளையற்ற ஏற்பு  உங்களை வழிகாட்டலுக்கு இட்டு செல்லும் என்று கூறிய போலி தீர்க்கதரிசிகளுக்கு(நபிமார்கள்) பஞ்சமே இல்லை. இந்த பரிதாபமான மக்கள் இரட்சிக்கப் படவில்லை; ஆனால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதற்காக அதுதான் நீங்கள் ஏற்றுக்கொள்கிற இடர்ப்பாடு(risk). கடவுளுடைய செய்தி தர்க்கப்பூர்வமானது  இல்லையென்றால், அது கடவுளுடைய செய்திதான் என்று நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?

நீங்கள் கூறுவதற்கு முரணாக, கடவுள் பகுத்தறிவு உள்ளவராக இருப்பதால், நாம் உளறல்களை நம்புவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். பொய்மையிலிருந்து உண்மையை வேறுபடுத்துவதற்கான அறிவை அவர் நமக்கு வழங்கினார். வாழ்க்கையில் சிறு விஷயங்களில் நம்முடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக நாம் இருக்க வேண்டும் என்றால், கடவுளை கண்டடைய ஏன் நாம் தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்கக்கூடாது?

நீங்கள் சதியை காணவில்லையா? நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாது என்று முஹம்மது ஏன் வலியுறுத்தினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது ஏனென்றால், அவருடைய உரிமைகோரல் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்பது அவருக்கு தெரியும். தான் ஒரு பொய்யர் என்பது அவருக்கு தெரியும். மக்கள் தங்களுடைய மூளையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உண்மையை கண்டுவிடுவார்கள்; தன்னுடைய பொய்களை ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.

வழிகாட்டலை கண்டடைவது என்று வரும்போது, நாம் மடத்தனமாக இருப்பதை கடவுள் விரும்புகிறார் என்று நம்புவது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாதென்றால், எந்த மதம் உண்மையானது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாமே நம்முடைய இதயத்திடம் முறையிட்டு, நம்முடைய மூளையை பயன்படுத்துவதற்கு எதிராக நம்மை எச்சரிக்கின்றன. எந்த ஒன்று சரியான ஒன்று? அதிக தர்க்க அறிவுப்பூர்வமாக  உள்ள ஒன்றை நாம் பின்பற்ற வேண்டுமா அல்லது நம்மை அதிகமாக மிரட்டுகிற ஒன்றையா?

தர்க்க அறிவைக்கொண்டு மட்டுமே நாம் உண்மையை கண்டடைய முடியும். உண்மை தர்க்க அறிவுப்பூர்வமானது. பொய்மையே தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. முஹம்மது கடவுளுடைய உண்மையான தூதர் இல்லை என்பதை காண்பதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் இதுதான். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள், கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று ஒருவர் உங்களிடம் கூறினால், நீங்கள் உடனடியாக அவரைவிட்டு விலகிவிட வேண்டும். ஏனென்றால் அந்த நபர் கடவுளுடைய தீர்க்கதரிசி அல்ல. அவர் ஒரு கபட வேடதாரி. முஹம்மது ஒரு பொய்யர் என்பதை காண்பதற்கு இது போதுமானதாக இல்லையா?

யார் செவிடன், ஊமையன், குருடன்? தன்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக உண்மையை கண்டடைபவனா அல்லது சிந்திக்காமல் நம்பிக்கை கொள்பவனா? இஸ்லாத்தை பொய்யென்று நிரூபிப்பது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?

தர்க்க அறிவினால் நீங்கள் கடவுளிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடுவீர்கள் என்பது உண்மையல்ல. தர்க்க அறிவினால் நீங்கள் முஹம்மதுவிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையைத்தான் இழந்து விடுவீர்கள். முஹம்மதுவுக்கு கடவுளை பற்றிய புரிதலே இருந்ததில்லை. கடவுளை பற்றி அவர் என்னவெல்லாம் சொன்னாரோ, அவை எல்லாமே அறிவீனமானது. தான் விரும்புகிற எதையும் செய்கிற, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத, போற்றி புகழப்பட விரும்புகிற, மூளையற்ற நம்பிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கிற, சுதந்திர சிந்தனையாளர்களை தண்டிக்கிற சதாம்  ஹுசேனை போன்ற, துன்புறுத்தி இன்பம் காணும்(sadist) சர்வாதிகாரியை போன்று கடவுளை அவர் உருவகித்தார். கடவுளை பற்றிய வரையறை அதுவல்ல.

முஹம்மதுவை போன்ற இவ்வளவு குறைவான மதிநுட்பம் உள்ள ஒரு மனிதனால் கடவுளுடைய மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் அவரை மனம் போனபோக்கில் ஆட்சி செய்பவராக அவர் விவரித்தார். கடவுளை பற்றிய முஹம்மதுவின் புரிதல் மடத்தனமானது. அதனால்தான் நீங்கள் உங்களுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சி செய்யும்போது, அவருடைய அல்லாஹ்விடம் நீங்கள் நம்பிக்கையை இழந்து விடுகீர்கள். முஹம்மதுவுடைய கடவுள் தர்க்க அறிவுக்கு புறம்பானவர். மிகவும் அறியாமை மிக்க ஒரு மனிதனுடைய மனதில் உருவகிக்கப்பட்ட உண்மையில் இல்லாத ஒரு பாத்திரம் தானே ஒழிய, அவர் கடவுள் இல்லை.

நான் இஸ்லாத்தை துறந்த பிறகு நான் கடவுளை கண்டடைந்தேன். நான் அதை தர்க்க அறிவினால் கண்டேன். கடவுளை கண்டடைய நான் பகுத்தறிவை விட்டுவிடவேண்டி வரவில்லை. உண்மை தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்க முடியாது. பொய்மைதான் தர்க்க அறிவுக்கு புறம்பானது. கடவுள் என்பது படைப்பின் அடிநாதமாக விளங்கும் ஒரே கோட்பாடு (Single Principle) ஆகும், ஒரு சர்வாதிகாரி அல்ல.

மனிதகுலம் பிளவுபட்டு இருப்பதற்கு காரணம், மனிதர்களில் பெரும்பான்மையினர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளர்களில் நம்பிக்கை கொள்வதுதான். நாம் இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிட்டு, தன்னை கண்டடைவதற்காக கடவுள் நமக்கு கொடுத்துள்ள மிகப் பெரிய பரிசை நாம் பயன்படுத்தினால், நாம் எல்லோருமே உண்மையான ஒரே கடவுளை கண்டடைவோம். மனித இனத்திற்கு இடையே உள்ள இந்த பிளவுகள் மறைந்து போகும்.

நீங்கள் ஷைத்தானால் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (அவற்றை மின்னஞ்சலில் கூற மாட்டேன்) எனக்கு காண்பிக்கப் படும்வரை, நானும் இஸ்லாத்தையும் முஹம்மது (ஸல்) நபியையும் பற்றி இதே மாதிரியானவைகளை கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகின்ற ஒவ்வொன்றும் உண்மையானதுதான் என்பதை அல்லாஹ் எனக்கு நிரூபித்து விட்டான்(சந்தேகமே இல்லை).

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (signs/ஆயாத்) உங்களுக்கு காண்பிக்கப்பட்டன என்றால், அவைகள் எனக்கு காண்பிக்கப்படவில்லையே. நீங்கள் நம்புவதை நான் நம்ப முடியாது. ஏனெனில் நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்கவில்லை. அத்தாட்சிகள் இல்லாத பட்சத்தில் நான் செய்யக்கூடியதெல்லாம், என்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சிப்பதுதான். நான் அதை செய்யும்போது, முஹம்மது ஒரு கபட வேடதாரி என்பதை நான் பார்க்கிறேன். நான் திரும்பவும் கூறுகிறேன். என்னுடைய புகார் கடவுளை பற்றி அல்ல. நான் நிராகரிப்பது முஹம்மதுவைத்தான். கடவுளோடு முஹம்மதுவுக்கு எந்த தொடர்பாவது இருந்தது என்று நான் நினைக்கவில்லை. அவர் கடவுளை புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவு.

பகுத்தறிவுக்கு புறம்பாக நாம் அவரிடம் நம்பிக்கை கொள்வதை கடவுள் விரும்புவாரா? அது இறைநிந்தனை(blasphemy). கடவுள் பகுத்தறிவுக்கு புறம்பானவர் அல்ல. சாத்தான் தான் பகுத்தறிவுக்கு புறம்பானவன். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று முஹம்மது உங்களிடம் கூறுகிறார் என்றால், முஹம்மது சாத்தானிடமிருந்து வந்தவர்தனே ஒழிய அவர் கடவுளிடமிருந்து வந்தவர் அல்ல என்பதற்கு அதுவே நிரூபணம்.

பரிதாபமான முஸ்லிம்களுக்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது. சாத்தானையையே அன்றி, கடவுளை அவர்கள் வணங்காததால் அவர்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள்; ஒவ்வொருவரோடும், தங்களுக்குள் மற்ற ஒவ்வொருவரோடும் நிலையாக போரில் ஈடுபடுகிறார்கள். ஏன் பூமியில் முஸ்லிம்களே மிகவும் ஏழைகளாகவும் மிகவும் துர்பாக்கியமான நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஏன் அவர்கள் நிலையாக தங்களுக்குள் ஒவ்வொருவரோடும் மற்ற ஒவ்வொருவரோடும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்? அது ஏனென்றால், அவர்கள் சாத்தானை வணங்குகிறார்கள் என்பதுதான்.

கடவுளுடைய அத்தாட்சிகளை பற்றி நீங்கள் பேச முடியாது என்று கூறுகிறீர்கள். அது எனக்கு என்ன நன்மையை செய்கிறது? அந்த அத்தாட்சிகள் யதார்த்தமானது என்றால், நீங்கள் தர்க்க அறிவுப்பூர்வமான வழியில் அவைகளை விளக்க முடியும். நீங்கள் தவறாக வழிநடத்தப் படவில்லை என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்? அந்த அத்தாட்சிகளை பற்றி எனக்கு கூறுங்கள். நீங்கள் முட்டாளாக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் நிரூபிப்பேன். நான் என்னுடைய மூளையை பயன்படுத்த வேண்டுமா அல்லது உங்களுடைய மூளையையா? நீங்கள் கண்ட அத்தாட்சிகள் உங்களை திருப்தி படுத்தினால் அது உங்களுக்குத்தான் நல்லது! நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்காதவரைக்கும் நான் நம்ப வேண்டியதில்லை. ஆதாரம் இல்லாமல் நம்பிக்கை கொள்வது முட்டாள்தனமாக ஆகிவிடும். பகுத்தறிவுக்கு புறம்பான மற்ற ஏராளமான மதங்களில் ஒன்றில் நம்பிக்கை கொள்ளாமல் இஸ்லாத்தில் நான் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்?

இஸ்லாம் அழகானதாகவும் அமைதிப்பூர்வமானதாகவும் இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொன்றும் மனித இயல்புக்கு இசைவானதாக இருக்கிறது.

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில்தான் உள்ளது. நீங்கள் இஸ்லாத்தை அழகானதாக பார்க்கிறீர்கள்.நான் அதை அசிங்கமானதாக பார்க்கிறேன். அது தனிப்பட்ட நம்பிக்கைகளை/கருத்துக்களை  அடிப்படையாகக்  கொண்டது(subjective). நாம் அழகியல் என்பதிற்குள் இறங்காமல் இருப்போமாக! எப்படியாயினும், இஸ்லாம் அமைதிப்பூர்வமானது அல்ல. அந்த உரிமை கோரல் ஒரு தமாஷ். முஸ்லிம்கள் எப்பொழுதும் சண்டையில்தான் ஈடுபடுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் முஹம்மதுவே 78 அதிரடி கொள்ளை தாக்குதல்களை நடத்தினார். “சண்டையிடுவது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது”(குர்ஆன் 2:216), “நீங்கள் ஜிஹாதில் சண்டையிடவில்லையென்றால், கடுமையான வேதனையைக் கொண்டு அல்லாஹ் உங்களை தண்டிப்பான்”(குர்ஆன் 9:39) என்று குர்ஆன் கூறுகிறது.

இஸ்லாம் அமைதிப்பூர்வமானது என்று கூறுவது கேலிக்குரியது. இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக உள்ளது என்று நீங்கள் கூறும்போது நான் மாறுபட வேண்டியிருக்கிறது. மனித இயல்புக்கு இசைவாக ஏதாவது இருந்தால், அது இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடியும். இஸ்லாம் இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடிவதில்லை. அது போதனை செய்யப்பட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அதற்கு அடிபணிய விருப்பமில்லாதவர்களின் மேல் அது திணிக்கப்பட வேண்டியிருக்கிறது. அது இயல்பானது அல்ல என்பதற்கு இதுவே நிரூபணம். காதலில் விழுவது இயல்பானது. ஆர்வம் இயல்பானது.  மகிழ்ச்சியையும் நிறைவையும் நாடுவது இயல்பானது. இவைகளே திணிப்பு இல்லாமல் இயல்பாக நாம் செய்ய விரும்புவது. ஒரு நம்பிக்கையானது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால் அது இயல்பானது அல்ல.

இஸ்லாம் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்று முன்பு நீங்கள் கூறினீர்கள். இயல்பான ஒன்று எப்படி தர்க்க அறிவுக்கு புறம்பானதாக இருக்க முடியும்? மேலும் அது இயல்பானது எனில், ஜிஹாத் (புனித போர்) நடத்தி வாளினால் மற்றவர்கள் மேல் இஸ்லாத்தை வலுக்கட்டாயமாக திணிக்கும்படி ஏன் முஹம்மது தன்னை பின்பற்றியவர்களுக்கு கட்டளையிட்டார்? ஜிஹாத் என்ற கருத்தாக்கமே இஸ்லாம் மனித இயல்புக்கு எதிரானது என்பதற்கு நிரூபணம் ஆகும். அனுமதிக்கப்பட்டதை ஏவுவது; தடை செய்யப்பட்டதை தடுப்பது(amr bi’l ma’ aroof and nahy anil munkar) என்ற கருத்தே இஸ்லாம் மனித இயல்புக்கு முரணானது என்பதற்கு நிரூபணம் ஆகும்.  இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக இருந்தால், ஏன் அதை மனிதர்களின்மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய தேவை இருக்கிறது?

உங்களுடைய தகவலுக்காக, இந்த உலகில் இன்னும் முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்கள் (காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய விசேஷ பார்வையை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருக்கிறான்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அவுலியாக்களும் (நண்பர்கள்/உதவி செய்பவர்கள்), முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்களும் அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்டது போன்ற  விசேஷ சக்திகள் கொடுக்கப்படுகின்றனர். முஹம்மதுவின் (ஸல்) நபித்துவத்திற்கு அவர்களே வெளிப்படையான ஆதாரமாக உள்ளனர். இவர்களில் ஒருவரிடம் அல்லாஹ் உங்களை கொண்டு வருவானாக. ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்.

முஹம்மதுவை உண்மையாக பின்பற்றுபவர்களான இவர்களில் எவராவது அவருடைய உரிமை கோரலை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால், எனக்கு எழுதும்படி தயவுசெய்து அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.

என்னை மறந்து விடுங்கள். நான் உருப்படாதவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த தளத்தை படிக்கின்ற இலட்சக்கணக்கானவர்களை பற்றி அல்லாமல், நீங்கள் என்னை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையை அறிய வேண்டியத் தேவை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா? விசேஷ சக்திகள் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம்களை தயவுசெய்து அனுப்பி வையுங்கள். இறுதியாக இஸ்லாத்தின் உண்மையை அவர்கள் நிறுவட்டும்.

முஸ்லிம்களுக்கு விசேஷ சக்திகள் எதுவும் கிடையாது. அது பொதுமக்களின் விருப்பங்களுக்கும் ஒருதலைபட்சதுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் அரசியல் தலைமைத்துவம் (Demagogy). இந்த வெற்று பேச்சுக்களால் எளிதில் ஏமாறக்கூடியவர்களை மயக்கலாம். ஆனால் சுதந்திரமாக சிந்திப்பவர்களை அல்ல. இஸ்லாம் என்பது ஒரு பொய் என்று எண்ணற்ற முஸ்லிம்களை நான் ஏற்றுக்கொள்ளும்படி செய்துள்ளேன். அதிகமான மக்கள் இந்த தளத்தை படிப்பார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை கட்டாயமாக வளர  உள்ளது. காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய உங்களுடைய ஞானம் பெற்ற அவுலியாக்களின் மறுப்பை நான் வெளியிடுவேன் என்ற என்னுடைய வாக்கை நான் உங்களுக்கு தருகிறேன். அதைப்பற்றி அவர்கள் எங்களுக்கு கூறட்டும். அவர்கள் எங்களுக்கு அத்தாட்சிகளை கொடுக்கட்டும். வருகை புரிந்து, நான் எவர்களை தவறாக வழிநடத்தி னேனோ அவர்களை வழிநடத்தும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

பனி இஸ்ரவேலின் தீர்கதரிசிகள் (நபிமார்கள்) முஹம்மது நபி (ஸல்) யை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் நபியுடைய (ஸல்) அவுலியாக்களின் அந்தஸ்து என்ன என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த உம்மத்தினுடைய (சமுதாயம்) அந்தஸ்து என்ன என்பதை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் தவறான கைகளில் நீங்கள் நேரத்தை செலவிட்டிருக்கலாம். உங்களுடைய கருத்துருக்கள் (perceptions) தடுமாற்றமுள்ளதாக ஆகி இருக்கின்றன.

இது மதியீனமானது. முஹம்மதை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்கும்படி இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் பிரார்த்தனை செய்தார்கள் என்று யார் சொன்னது? இந்த முழுவதும் கேலிக்கதக்க உரிமை கோரலுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? ஆதாரமற்ற உரிமை கோரல்களை செய்வது முஸ்லிம்களாகிய உங்களுக்கு வழக்கம்தான். முரண்படுவதை நீங்கள் சகித்துக்கொள்ளமாட்டீர்கள் என்பதால் ஒருவரும் உங்களோடு முரண்படுவதற்கு ஒருபோதும் துணியவில்லை என்பதினால், நீங்கள் இந்த பொய்யான உரிமை கோரல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த பொய்களை உண்மையிலேயே நம்புகிறீர்கள். உண்மையிலிருந்து எதுவுமே தூரமாக இருக்கவில்லை. முஹம்மதுவை பின்பற்றுபவராக இருக்கும்படி ஒருவரும் பிரார்த்தனை செய்ததில்லை. ஏனெனில் முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசியாகவே இருக்கவில்லை. எந்த ஒரு மதத்தினுடைய எந்த புனித நூலிலும் முஹம்மது கூறப்படவில்லை. முஹம்மது பைபிளில் கூறப்பட்டுள்ளாரா? இல்லை, அவர் கூறப்படவில்லை.

பிரயோஜனமற்றது என்று நான் யூகிக்கிற ஒரு நீண்ட கலந்துரையாடலாகவே இது இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஹிதாயத்தை (வழிகாட்டல்) கொடுக்க முடியாது.

அப்படியானால் நீங்கள் எனக்கு ஏன் எழுதினீர்கள்? நரக நெருப்பைக்கொண்டு நீங்கள் என்னை மிரட்டினால் நீங்கள் என்னிடம் எறிகிற எந்த பகுத்தறிவற்ற உரிமை கோரலையும் கண்மூடித்தனமாக நான் நம்பிவிடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு ஆதாரம் தேவை. நீங்கள் ஒன்றையும் தரவில்லை. நான் பகுத்தறிவுக்கு புறம்பான ஒரு கடவுளை நம்ப மாட்டேன்; கண்மூடித்தனமாக பின்பற்றுபவனாக இருக்க மாட்டேன்.

உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க அல்லாஹ் விதித்திருந்தால், அவன் உங்களை நரக நெருப்பில் போடுவதென்று முடிவு செய்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அது வரும். நீங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, மனம் வருந்தி, அறிஞர்களிடம் போகாமல் அல்லாஹ்வின் அவுலியா அக்ராமிடம் செல்லும்படி நான் உங்களை சும்மா எச்சரிக்கிறேன். உங்களுடைய தீர்வு அவர்களிடமே உள்ளது. இல்லையென்றால், சீக்கிரமாகவோ அல்லது பிறகோ ஆனால் நிச்சயமாக தண்டனை உங்களிடம் வரும்… என்னை நம்புங்கள்… வெகு சீக்கிரமாகவே, இன்ஷா அல்லாஹ்.

அவ்வளவுதானா? தர்க்க அறிவு ஒருவரை முஹம்மதின் கடவுளிடம் அவநம்பிக்கை கொள்ளும்படி செய்துவிடும் என்று முதலில் கூறுகிறீர்கள். ஏனெனில் அவருடைய கடவுள் தர்க்க அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானவர். பிறகு உங்களிடம் அத்தாட்சிகள் உள்ளன, ஆனால் நீங்கள் அவைகளை சொல்ல முடியாது என்று கூறுகிறீர்கள். பிறகு உங்களுக்கு ஹிதாயத் இல்லை என்று கூறுகிறீர்கள். முஹம்மது கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் இதுவரை கொடுக்கவில்லை. பிறகு நான் உங்களுடைய பகுத்தறிவுக்கு புறம்பான கடவுளையும் அவருடைய போலி தீர்க்கதரிசியையும் நம்பவில்லையென்றால், நான் நரகத்திற்கு அனுப்பப்படுவேன் என்று மிரட்டல்களை விடுக்கிறீர்கள். நீங்கள் ஒரு குழந்தையை பயமுறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் பகுத்தறிவான மனிதர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. இஸ்லாம் உண்மையானது என்று நிரூபிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதுதான். மிரட்டல்கள் மூடர்களுக்கு உரியது. புத்திசாலி மனிதர்களை அடிபணியும்படி  பயமுறுத்த முடியாது. போலி ஆசாமிகளுக்கும் கபட வேடதாரிகளுக்கும் இரையாகாதபடி பயன்படுத்துவதற்காகவே கடவுள் மூளையை நமக்கு கொடுத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் மிரட்டல்களை விடுக்கலாம். எனக்கு தர்க்கப்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும். உங்களிடம் ஒன்றுமே இல்லை.

சிந்திப்பதைப் பற்றி பயப்படாதீர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. உங்களுடைய மூளையை பயன்படுத்துங்கள். நீங்கள் உங்களுடைய மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். தர்க்க அறிவைக்கொண்டு நீங்கள் யதார்த்தமான கடவுளை கண்டடைய முடியும். கபட வேடதாரிகளும் ஏமாற்று பேர்வழிகளும் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய பொய்களுக்கு இரையாகாதீர்கள். தங்களுடைய மூளையை பயன்படுத்தியதற்காக மனிதர்களை கடவுள் ஒருபோதும் தண்டிக்க மாட்டார். முஹம்மதுவை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் சாத்தானை பின்பற்றுகிறீர்கள். இந்த மனிதர் என்ன கூறினாரோ, செய்தாரோ அவை சாத்தானியத்தனமாகவே இருந்தன. ஒரு பொய்யரை பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

இஸ்லாம் உண்மையானது என்று உங்களால் நிரூபிக்க முடியாது. ஆனால் அது ஒரு பொய் என்று நான் நிரூபித்திருக்கிறேன். என்னுடைய கட்டுரைகளை தயவுகூர்ந்து படியுங்கள். நீங்கள் உண்மையை அங்கே காண்பீர்கள். என்னுடைய உரிமை கோரல்களுக்கு ஆதாரமாக  நான் குர்ஆனையும் ஹதீதையும் பயன்படுத்துகிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டால், என்னுடைய புத்தகத்தின் டிஜிட்டல் பிரதியை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். முஹம்மது பொய் உரைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரம் ஏராளமாக உள்ளது. சாத்தானுடைய தீர்க்கதரிசியை பின்பற்றுவதற்காக நீங்கள் வெகுமதி அளிக்கப்பட மாட்டீர்கள். விழித்துக்கொள்வதற்கு இதுவே நேரம். பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் விழித்துக்கொண்டு வருகிறார்கள். கடைசியாக இருந்து விடாதீர்கள்.

 

 

— அலி சினா (Ali Sina)

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் (Anand Sagar)

முன்வினை பயன் மற்றும் மறுஉலக வாழ்வு

Posted on Updated on

மறுஉலக வாழ்வு பற்றிய என் கருத்துக்களை நான் வெளியிட்ட பின்னர், பல கேள்விகள் என் முன் வைக்கப்பட்டன. இந்த கட்டுரையில் அதற்கான பதில்களை தர முயற்சித்துள்ளேன். இதுவே இந்த தலைப்பு குறித்தான இறுதியான கட்டுரையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காரணம், நான் இஸ்லாம் குறித்தான தலைப்புகளுக்கே செல்ல விரும்புகிறேன்.

முஸ்லிம்களும் மறுஉலக வாழ்வு உண்டு என கூறுகின்றனர். நாம் அவர்களை ஒத்துக் கொள்வதில்லை, சரிதானே? நம்மைப் பொறுத்தவரை அது எந்த அடிப்படையையும் கொண்ட ஒன்றில்லை.

மறுஉலக வாழ்வு இருக்கிறது என்று நிருபிப்பதற்கு போதுமான அளவு சாட்சியங்கள் உள்ளன.   “கடவுளையும் மறுஉலக வாழ்வையும் இப்போது ஏன் நான் நம்புகிறேன்” என்ற என் கட்டுரையில், சரிபார்த்து அறிந்துகொள்ளக்கூடிய NDE (இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) அனுபவங்களை தந்துள்ளேன். நான் எப்போதெல்லாம் அது போன்ற காணொளிகளை மேலும் காண்கிறேனோ, அப்போதெல்லாம் மேற்கொண்டு அதை இங்கே இணைத்திடுவேன். சாட்சியங்கள் மீது தான் அறிவியல் கட்டப்பட்டுள்ளது. சாட்சியங்களை மறுதலித்தால் நாம் அறிவியலை மறுதலிக்கிறோம்.

உண்மை என்னவெனில் மறுஉலக வாழ்வு உண்டு என்று முஹம்மது சொன்னது, அவரை உண்மையாளர் ஆக்காது. அவருடைய காலத்தில் அனைவருமே மறுஉலக வாழ்வு உண்டு என்றே நம்பினர். , மக்களை முட்டாளாக்கி திறமையாக கையாள இந்த நம்பிக்கையை அவர் ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.

ஏன் அனைவருக்கும் இந்த NDE அனுபவம் ஏற்பட்டு, அந்த அனுபவத்தை இந்த உலகுக்கு அறிவிக்கவில்லை?

நூற்றுக்கும் மேற்பட்ட NDE அனுபவங்களின் மீது நடத்தப்பட்ட ஆராய்சிகளின்படி, சுமார் ஐந்துபேரில் ஒருவருக்கு NDE அனுபவம் ஏற்படுகிறது. ஏன் மற்ற அனைவருக்கும் ஏற்படவில்லை என்பது ஆராய்சியாளர்களுக்கு புதிராகவே இருக்கிறது. இருப்பினும், சிலருக்கே ஆன்மா இருக்கிறது என்றும் பலருக்கு ஆன்மா இல்லை என்றும் நாம் கருதி விடமுடியாது.

நீங்கள் முன்வினைப்பலன்(Karma) பற்றி குறிப்பிடவில்லை. முன்வினைப்பலன் இல்லை என்றால் நீதியில்லை.

முன்வினைப்பலனின் கோட்பாடு என்னவெனில், இந்த ஜென்மத்தில் நீங்கள் தீமை செய்தால், மறு ஜென்மத்தில் நீங்கள் தாழ்ந்த குடியிலோ அல்லது அதனினும் கீழான ஒரு விலங்காகவோ பிறந்து, இந்த பிரபஞ்சத்திற்கு அளிக்க வேண்டிய உங்கள் கடன்களை கொடுத்து தீரும் மட்டும்  ஒரு பரிதாபகரமான வாழ்க்கை உங்களுக்கு விதிக்கப்படும் என்பதாகும்.

அன்னை தெரசாவை அன்பு செய்வதைப் போலவே வெகுஜன கொலைகாரர்களான ஸ்டாலின் மற்றும் ஹிட்லர் இருவரும் அன்பு செய்யப்படுவார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

ஆம், கடவுள் வேற்றுமை பாராட்டுவது இல்லை. அவர் அனைவரையும் ஒன்றாகவே நேசிக்கிறார். ஏன், அவர் மனிதர்களை நேசிக்கும் அதே அன்பில்தான் விலங்குகளையும் மரங்களையும் நேசிக்கிறார். அன்பு செய்வதே அவரது இயல்பு. அன்புசெய்வதைத்தவிரஅவரால்வேறுஒன்றும்செய்யமுடியாது.

“ஆனால்”,  ஆம், ஒரு பெரிய “ஆனால்” மிஞ்சி இருக்கிறது. கடவுளிடம் நியாயத்தீர்ப்பு என்ற ஒன்று இல்லாவிட்டாலும், ஒவ்வொரு சிந்தனைக்கும் சொல்லுக்கும் மற்றும் செயலுக்கும் எவ்வித தண்டனையும் கிடையாது என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நீங்கள் உங்கள் கைகளை நெருப்பில் வைத்தால், தீக்காயம் ஏற்படுகிறது. யாரும் வந்து உங்களைத் தண்டிக்க வில்லை. இயற்பியல் சட்டத்தை நீங்கள் மீறியதற்கான விலையாக அந்த தீக்காயத்தை பெற்றீர்கள். அதேபோன்று எப்போதெல்லாம் நாம் ஆன்மீக சட்டத்தை மீறுகிறோமோ அப்போதெல்லாம் நம்முடைய செய்கைகளுக்கான விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். நாம் இயற்பியல் சட்டத்தை மீறும்போது அதன் விளைவு உடனடியாக நடப்பதைப் போன்றே, இதுவும் உடனடியாக நடைபெறுகின்றது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், இந்த உலகத்தை விட்டு செல்வதுவரை நாம் இது பற்றி அறிவது இல்லை.

இந்த காணொளியில் உள்ள நபர் நமது செய்கைகளுக்கான பலன் என்ன என்பதை விளக்குகிறார். மக்களின் நிலை என்ன?

நமது தனித்துவம் என்பது ஒரு மாயை. கருப்பொருளில் நாம் அனைவருமே ஒன்று தான். உங்கள் கைகளின் விரல்களைப் பாருங்கள். நீங்கள் அதன் அடிபாகத்தை மறைத்தால், அவை அனைத்தும் பிரிந்து தனித்துவமானதாகத் தோன்றும். ஆனால் அவை அனைத்தும் ஒரே கையின் விரல்களாகும். உடம்பில் ஏதாவதொறு பாகம் காயம் அடைந்தால், உடம்பின் அனைத்து உறுப்புகளும் அந்த காயத்தின் வேதனையை அனுபவிக்கிறது. உடலும் ஆன்மாவும் இணைந்து நாம் அமையப் பெற்றிருக்கிறோம்.  கடவுளை துண்டுகளும் துணூக்குகளுமாக பிரித்ததே நம் அனைவரின் ஆன்மாவாகும். மேலும் இந்த பிரபஞ்ஜமானது ஒற்றை எலக்ட்ரானால் ஆனது என்று சொல்கின்ற ஒரு தத்துவம்(theory) இருக்கிறது.  துகள்களால் இரண்டாகவோ அல்லது முடிவற்ற எல்லையில்லா இடங்களிலோ ஒரே நேரத்தில் இருக்க முடியும். அப்படியென்றால், நீங்களும் நானும் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரே துகளினால் ஆனதாகும். எனவே, ஒரே மூலத்தில் இருந்து நமது ஆன்மா மட்டும் வரவில்லை. உடல் ரீதியாகவும்கூட நாம் அனைவரும் ஒன்றுதான். இப்போது நாம் இருக்கும் இந்த தளத்திலிருந்து அனைத்தும் ஒன்று என்ற தத்துவத்தை நம்மால் காண முடியாது. எப்போது நாம் இங்கிருந்து கடந்து மறுஉலகத்திற்குள் நுழைகிறோமோ, அப்போது மற்றவர்களுக்கு நாம் செய்த அனைத்தும், நமக்கே செய்தோம் என்ற அனைத்தையும் காண்கிறோம். மற்றவர்களுக்கு நீங்கள் அளித்த எல்லா வேதனைகளும் எல்லா சந்தோசங்களும் ஒன்றும் கூடாமல் ஒன்றும் குறையாமல் நூறு சதவீதம் உங்களுக்கே திரும்ப வந்து சேரும். காலம் எனும் பரிமாணம் அற்றதாய் மறுஉலகம் இருப்பதால், நித்தியமும் கணநேரமும் ஒன்றாகி விடுகிறது. எனவே, இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் அளித்த வேதனை சிறிது நேரமே நீடித்து இருப்பினும், மறுஉலகத்தில் நீங்கள் அதை நித்தியமாக அனுபவிப்பீர்கள்.

அத்துடன் முன்வினைபயன் என்பது  காரணமும்-விளைவும் (cause and effect) என்ற கோட்பாடையும் அடிப்படையாக கொண்டது.

நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனை என்ற வடிவமாக முன்வினைபயன் இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்காக வேதனையடைய இந்த உலகத்திற்கே மறுபடி நாம் திரும்ப அனுப்பப்பட்டால், அது தண்டனையாகும். நமது செயலுக்கான விளைவு உடனுக்குடன் நடந்துவிடுகிறது. ஆனால் மறுஉலகவாழ்வில் அந்த திரைசீலை விலகும்போதுதான் நம்மால் அதை அறிந்து கொள்ளமுடிகிறது.

முன்வினைப்பயன் என்ற தத்துவத்தில், மேலும் ஒரு முரண்பாடுஉள்ளது. ஒருவர், அவர் என்ன குற்றம் செய்ததிற்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று சொல்லாமல் தண்டிக்கப்படுகிறார். அது அநிதீயாகும். சில மதங்கள் நம்புவதுபோல் இந்த உலகம் ஒரு பள்ளிக்கூடமென்றால், என்ன விதமான பாடங்கள் நாம் படிக்க வேண்டும் என்று கட்டாயம் அறிவுறுத்தப்பட வேண்டும். என்ன விதமான பாடங்களை எதற்காக எப்படி படிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லாமல், அனைத்தையும் எவ்வாறு நாம் கற்க முடியும். அதற்காக அன்பே உருவான ஒரு கடவுள் எப்படி நம்மை தண்டிக்கமுடியும்?

முன்வினைப்பயன் என்பது ஒரு தவறான சித்தாந்தமாகும். மேலும் அனைத்து தவறான சித்தாந்தங்களைப் போன்றே இதுவும் தீமையானதாகும். வேதனை அடைபவர்களின் நிலையை இது அலட்சியப்படுத்துகிறது. அதிர்ஷ்ட மற்றவர்கள் அவர்களுக்கான பலனைப் பெறுகிறார்கள் என்று அது முன்னூகிக்கிறது.

தவறான நம்பிக்கைகள் எப்போதும் ஆபத்தானவை. ஒரு தத்துவம் சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருந்தால், அது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் என்றால் அது மிக உறுதியாக பொய்யானது. ஒரு தத்துவம் உண்மையா? பொய்யா? என்பதை அறிய இது அநேகமாய் ஒரு சிறந்த அளவு கோளாகும். உதாரணத்திற்கு, வெறுப்பு மற்றும் போரை ஊக்குவிக்கும் இஸ்லாம் போன்ற, ஒரு தத்துவம் பொய்யானதாகத்தான் இருக்க வேண்டும். முன்வினைப்பயன் தீண்டாமையையும் தாழ்ந்த குடியையும் ஊக்குவிக்கிறது.

உங்கள் கஷ்டங்கள் தெய்வீகமாக நியமிக்கப்பட்டதென்று நீங்கள் நம்பினால், வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக போராட வேண்டும் என்ற உங்களது அறிவாற்றல் தவறிப்போய்விடும். இந்தியாவின் முன்னேற்றத்தை முட்டுக்கட்டை செய்த மிகபெரும் கொள்ளை நோய் ஜாதீயமாகும்(casteism). இது முன்வினைப்பயன் என்ற தத்துவத்தின்மேல் நம்பிக்கை கொண்டதால் விளைந்தது.

நாம் இந்த உலகத்திற்கு தண்டனையை அனுபவிப்பதற்காகவோ ஒரு பாடம் கற்பதற்காகவோ அல்லது ஒரு முஸ்லீம் சொல்வது போல் சோதிக்கப்படுவதற்காகவோ வரவில்லை.  நம் ஆன்மா கடவுளின் ஒருபடைப்பு அல்ல. அது கடவுளின் ஒரு பகுதியாகும். அது உருவாக்கப்படவோ அல்லது களங்கப்படவோ இல்லை. தண்ணீரை மாசடைய செய்வதுபோல் அந்த ஆன்மாவையும் மாசடைய செய்யலாம். ஆனால் மிகவும் மோசமாக மாசுபட்ட தண்ணீரைக்கூட அதன் அசலான தூய்மை நிலைக்கு கொண்டு வர நம்மால் முடியும்.  நம் ஆன்மா விஷயத்திலும் இது உண்மை தான்.

கடவுளிடம் உள்ள அனைத்தும் நம்மிடம் உள்ளது. உங்கள் உடலைப்பற்றி சிந்திக்கவும். நீங்கள் சில 100 டிரில்லியன் உயிரணுக்களால்(cells) செய்யப்பட்டுள்ளீர்கள். ஒவ்வொரு செல்லிலும் உங்களைப் பற்றிய அனைத்தும் வரையப்பட்டுள்ளது. உங்களின் மொத்த வடிவும் ஒவ்வொரு செல்லிலும் கலந்துள்ளது. அதே போன்றே கடவுளின் அனைத்தும் ஒருவரில் கரைந்துள்ளது. ஒவ்வொரு ஆன்மாவும் கடவுளின் பிம்பமே.

கடவுள் அறிந்திருக்கின்ற அனைத்தையும் நாமும் அறிவோம். நாம் இந்த இயற்பியல் வடிவில் இருக்கும்போது அவை அனைத்தும் நமக்கு மறைக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்கிறோம். காய்ந்த தரையில் இருக்கும் ஒரு தண்ணீர் மூலக்கூறை போல் நாம் இருக்கிறோம். மகா சமுத்திரத்திலிருந்து வந்த நமக்கு அது பற்றிய நினைவுகள் நம்மிடம் இல்லை. ஆனால் நாம் எப்போது நம் மூலத்தை அடைகிறோமோ, அப்போது நாம் அதுவாகவே ஆகிறோம். அப்போது அனைத்து அறிவும் நமக்கு நினைவு படுத்தப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை நினைவுப்படுத்துவது என்பது, மற்ற அனைத்து ஆன்மாக்களோடும் ஐக்கியமாவது என்பதாகும். இந்த பிரபஞ்சத்தோடு அனைத்தும் ஒன்றே என்பதை மறு கண்டுபிடிப்பாக கண்டுபிடிப்பது போன்றதாகும்.

நாம் கற்றுக்கொள்வதற்காக இந்த உலகிற்கு வரவில்லை என்றால், பின் வந்த நோக்கம்தான் என்ன?

நாம் நமது இருப்பை(existence) அனுபவிக்கவே இங்கு வந்துள்ளோம். விஷயங்கள் அவற்றின் எதிர்பதத்தால் மட்டுமே அறியப்படுகிறது. ஈரத்தன்மையை அனுபவிக்க வறட்சி இருக்க வேண்டும். உயரத்தை அனுபவிக்க குள்ளம் இருக்கவேண்டும். வெளிச்சத்தை அனுபவிக்க இருள் அவசியம். எனவேதான் நாம் ஜீவாத்மாவை அனுபவிக்க கடவுள்(பூரண அறிவுநிலை மற்றும் பூரணஅறிவற்றநிலை) என்ற இந்த இரு துருவங்களைப் படைத்துள்ளார். இந்த உலகத்தில் உள்ள நூறு வருடத்தை நித்தியத்தோடு ஒப்பீடு செய்யும்போது அவை ஒன்றுமே இல்லை. அதுவே நமது உண்மையான வயதுதாகும்.

நாம் அதை அனுபவிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தால், ஏன் இவ்வளவு பாடுகள் இருக்கிறது?

நாம், நமது சவால்களை தேர்வு செய்கிறோம். ஆனால் அவற்றின் விவரங்களை விட்டுவிடுகிறோம். இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பொருள் உலகானது Heisenberg கின் நிச்சயமற்ற கோட்பாட்டுக்கு(uncertainty principle) உட்பட்டது. நம் மீது என்ன வாய்ப்பு எறியப்படுகிறதோ அதை எதிர்கொண்டு, வாழ்வின் சவால்களை சமாளித்து வாழ்வதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். நம் வாழ்வின் நோக்கம் பிரச்சனைகளை போராடி வென்று வாழ்கையை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதாகும்.

எதையும் எளிதாக கொள்வதற்காக நாம் இங்கே வரவில்லை. நமது வீடு சொர்கத்தில் உள்ளது. அங்கே அனைத்தையும் நாம் நமது நினைவுகளால் கட்டமைத்துக் கொள்ளலாம். அங்கே அனைத்துமே எளிதானது.  நம்மை நாமே சவால் விடுவதற்காகவே, நாம் இங்கே வருவதற்கு முடிவெடுத்தோம்.

மறுஉலகைப் பற்றி பேசும் போதெல்லாம் உவமைகளை கொண்டு எளிதாக நாம் கையாள்கிறோம். இயேசு மிக அதிகமாக உவமைகளை பயன்படுத்தினார். நானும் ஒன்றை எய்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் மிக வசதியாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மென்மையான படுக்கையில் உறங்குகிறீர்கள். நீங்கள் விழிக்கும்போது வெந்நீர் குளியல். குளிசாதனப்பெட்டியில் இருந்து நீங்கள் விரும்புவதை எடுத்து உங்கள் அடுப்பில் சமைக்கிறீர்கள். அப்போது உங்கள் காபி சமைக்கும் இயந்திரம் உங்களுக்கு ஒரு அருமையான காபி காய்ச்சுகிறது.  உங்கள் காலை உணவு மேஜையில் உங்களுக்கு விருப்பமான புதிதான பழங்கள் இருக்கின்றன. வாழ்க்கை நன்றாக மற்றும் எளிதாக உள்ளது. ஆனால் நீங்கள் ஏதாவது கொஞ்சம் கிளர்சியை விரும்புகிறீர்கள். எனவே நீங்கள் ஒரு முகாமில் தங்க தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் வனப்பகுதிகளில் ஒரு கூடாரம் அமைக்கிறீர்கள். நீங்கள் தரையிலே, உறக்கப் பைகளில் தூங்குகிறீர்கள். கொசுக்கள் உங்களை கடித்து உயிரைவாங்கும்போதே காட்டாற்றின் குளிர்ந்த தண்ணீரிலே குளிக்கிறீர்கள்.  நீங்கள் கூடி,வேட்டையாடி அல்லது மீன்பிடித்து நெருப்பு உண்டாகி அதை சமைத்து சாப்பிடுகிறீர்கள்.

ஏன் உங்களது வாழ்க்கையை மிகவும் கடினமானதாக செய்கிறீர்கள்? மேலும் சிலர் இன்னும் அதிகமாக சென்று மலைமேல் ஏறுகிறார்கள். இரக்கமற்ற வெப்பநிலை மற்றும் நிலப்பகுதிகளில், தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். ஏன் சுகவாசியானஒருவர், இப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டும்.? அவர்கள் என்ன பைத்தியங்களா? சவால்கள் நமக்கு பிடிக்கும் என்பதால்தான். அதனால்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒருவர் மீன்பிடிக்க செல்வதை தேர்ந்தெடுப்பதைப்போல், வேறொருவர் எவரெஸ்ட் மலை ஏறுவதை தேர்ந்தெடுப்பதைப்போல். இந்த உலகத்தில் நாம் சந்திக்கப்போகும் சாவால்களின் தரத்தை நாமே தேர்ந்தெடுக்கின்றோம். பூவுலக வாழ்வு எனும் யோசனையே இப்படிப்பட்ட சாவால்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதே.

இது ஒரு உவமையாக உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு சுற்றுலாவோ அல்லது முகாமில் தங்குவது போன்றோ அல்ல. நம்முடைய வாழ்வில் ஒரு நோக்கம் இருக்கிறது. இராணுவ சேவை ஒருவேளை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கலாம். அவர்கள் இராணுவத்தில் அதன் துன்பங்களையும் மற்றும் ஆபத்துக்களையும் பற்றி அறிந்திருந்தாலும்கூட வீரர்கள் தானாகவே முன்வந்து இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் சேவையில் ஒரு நோக்கம் உள்ளது. நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. இறுதியில் நாம் அதை கண்டுபிடிப்போம். நான்15 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பிறப்பின் நோக்கத்தை கண்டு கொண்டேன். 9 வயதில் மிக உயரத்தில் இருந்து நான் தவறி விழுந்தபோது மருத்துவர்கள் நான் பிழைப்பது மிக கடினம் என்று என் பெற்றோரிடம் கூறிவிட்டனர். அதில் தப்பிப்பிழைத்து மனித குலத்தில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாம் பற்றிய உண்மைகளை கற்பிக்கவே இந்த உலகத்திற்கு நான் வந்தேன் என்றும் அதுவே என் பிறப்பின் நோக்கம் என்றும் நான் கண்டு கொண்டேன். 15 வருடத்திற்கு முன்புவரை நான் இதை அறிந்திருக்கவில்லை. அதன் பின்பும்கூட இஸ்லாமை இந்த உலகில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இப்போது நான் கடவுளைக் கண்டுகொண்டேன். என் வாழ்க்கையில் நடந்த என் தோல்விகள், வெற்றிகள் மேலும் என் துன்பங்கள் எல்லாம் இந்த பணிக்காக என்னை தயார் செய்ததை என்னால் இப்போது காணமுடிகிறது. 15 வருடங்களுக்கு முன் இந்த பாதையை நான் தேர்ந்தெடுத்தேன் என்று எண்ணினேன். இல்லை, நான் பிறப்பதிற்கு முன்பே நான் இதை தேர்ந்தெடுத்து விட்டேன்.

ஏன் இங்கு இருக்கிறார்கள் என்று சிலருக்கு தெரியும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். மற்றவர்களும் அதை சந்தோசமானதாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதைத்தான் மற்றவர்கள் தவற விடுகிறார்கள். அவர்கள் ஏமாற்றி காயப்படுத்தி மற்றும் அக்கிரமமாய் நடக்கிறார்கள். சாகசம் முடிந்தவுடன் இந்த மக்கள் ஒரு முரட்டுத்தனமாக எழுப்புதல் அடைந்து, விட்டிற்கு திரும்ப அழைக்கப்படுவார்கள். நிச்சயமாக அங்கே அவர்களுக்கு தண்டனை கிடையாது. ஆனால் பச்சாதாபமும் வருத்தமும்(remorse) உண்டாகும். வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பை தவறவிட்டதிற்க்காய் அவர்கள் வருந்துவார்கள்.

மேலும் ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன். இருட்டில் நீங்கள் ஒருவனை சந்தித்து, அவனை அடித்துக் கொன்று விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் உங்களை மிதித்ததற்க்காகவோ அல்லது நீங்கள் அவனை கொள்ளையடிக்கவோ ஏதோ ஒன்று. நீங்கள் யாரும் பார்க்கவில்லை என்று சந்தோசமாக உங்கள் வீட்டிற்கு ஓடி விடுகிறீர்கள். சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் இருந்து உங்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது. காவலர் உங்களிடம் யாரோ ஒருவர் உங்கள் அப்பாவை அடித்துக் கொன்றுவிட்டார் என்கிறார்கள். நீங்கள் இனி எப்போதும் சந்தோசமாக இருப்பீர்களா? உங்களுக்கான தண்டனையை நீங்களே தேடமாட்டீர்களா?

எவற்றையெல்லாம் நாம் மற்றவர்களுக்கு செய்தோமோ, அவற்றை நாம் நமக்கே செய்தோம். நாம் எப்போது இந்த உலகை விட்டு செல்கிறோமோ அப்போதுதான் நாம் இதை அறிகிறோம். மனசாட்சி இல்லாமல் மக்கள் இங்கே வாழ முடியும். மறுஉலகில் அது முடியாது.

ஒரு NDE அனுபவ குறிப்பில், ஒரு பெண் கூறுகிறார், சொர்கத்திற்க்குள் நுழையும் முன் அவர் இரண்டு வேறுவேறான நரக வாயிர்க்கதவுகளைக் காண்கிறார். முதலில் நெருப்பு எரிகின்ற இடத்தைக் காண்கிறார். அங்கே மிகக் தீமையான ஆன்மாக்கள் ( முஹம்மது மற்றும் ஹிட்லரைப் போன்றதாக நான் கருதுகிறேன்) தீயில் கருகுகின்றன. பின் அவர் அடுத்த வாயிர்க்கதவுக்கு கடந்து செல்கிறார். இது ஒரு பாழான தனித்து விடப்பட்ட இடம். அது சிவப்பு வானத்தையும் நீண்ட நிழல்களையும் கொண்டுள்ளது. தங்கள் அருகில் யார் இருக்கிறார்கள் என்றுகூட அறிய முடியாத அளவிற்கு தங்கள் சுயநினைவுகளால் உறிஞ்சப்பட்ட மனிதர்களால் அந்த இடம் நிறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் முகங்கள் சோகத்தினாலும் வருத்தத்தினாலும் நிறைந்து இருந்தது. அவருக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது என்று அவர் கூறுவது என்னவென்றால், இந்த இரண்டு நரக வாயிர்க்கதவுகளும் மிகப்பெரியதாய், நரகத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாய் முழுவதும் திறந்து இருந்ததுதான். ஆனால் அங்கிருந்த எந்த ஆன்மாவும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்யவில்லை. தன் மொத்த வாழ்வையும் காண்பித்து விட்டு, சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்ல தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டதென்று மற்றொரு NDE நிகழ்வில் வேறொருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.  நான் சொர்கத்திற்கு செல்ல தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் நான் சொர்கத்திற்கு சொந்தமானவன் இல்லை என்று அறிந்திருந்தேன் என்கிறார்.

மறுஉலகைப் பற்றி நான் கற்றதில் இருந்தும் புரிந்துகொண்டதில் இருந்தும், நமது தண்டனையை நாமே தீர்மானிக்கிறோம் என்று அறிந்து கொண்டேன். அங்கே ஆன்மாக்கள் இங்கே நாம் பேசிக்கொள்வது போல் பேசுவதில்லை. ஒருவருக்கொருவர் அடுத்தவர்களின் மனதை வாசிக்கிறார்கள். ஆம், அங்கே அந்தரங்கம் இல்லை. நம் அனைவரின் நினைவுகளும் நம் அனைவரின் மொத்த வாழ்வும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இங்கே நாம் ஒரு கேவலமான குப்பைத் துண்டாக இருந்தாலும் நம் நினைவுகளை இங்கே மறைக்க முடியும். நாம் பரிசுத்தமானவன் போல் நடிக்க முடியும். அதற்கு அங்கே வாய்ப்பே இல்லை.

இதை நான் கற்றுக்கொண்டபின், நான் உணர்ந்தது என்னவென்றால் எல்லோரின் மனத்தையும் எல்லோரும் வாசிக்க முடியும் என்றால் இந்த உலகமும் ஒரு சொர்கமாக மாறிவிடும் என்பதாகும். இங்கே நாம் ஒருவரை சந்திக்கும்போது, அவர்களை சந்தித்ததால் பெருமகிழ்ச்சி அடைந்ததுபோல் ஒரு பொய்யான சிரிப்பை நம் முகத்தில் வைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் அடிமனதில் நாம் அவர்களின் தைரியத்தை வெறுத்து அவர்களை ஏமாற்றுகிறோம். எல்லோரும் எல்லோரின் மனதை அறிந்து கொள்ளமுடியும் என்றால், தீய சிந்தனை செய்ய ஒருவரும் துணிய மாட்டோம். ஒரு NDE கூறியது போல் சொர்க்ககுடியுரிமை கொண்டவர்கள் அனைவரும் அனைவரையும் அன்பு செய்கிறோம் என்று சொன்னது ஆச்சரியம் அல்ல. ஆனால் நிச்சயமாக உலக மக்கள் அனைவரும் அனைவரின் சிந்தையையும் காணமுடியும் என்கின்றபோது எப்படி பல்வேறு எண்ணங்கள் இருக்க முடியும்?

 

– அலிசினா(Ali Sina)

மொழியாக்கம் : அந்தோணி(Antony)

 

நம்பிக்கையற்றவரின் விசுவாசம்

Posted on Updated on

சமய நம்பிக்கை, மற்றும் நம்பிக்கை இன்மை சூழ்நிலை சார்ந்தது. எவரும், எப்போதும் சமய நம்பிக்கையாளரகவோ,  எப்போதும் சமய நம்பிக்கை அற்றவராகவோ இருப்பதில்லை.  அனைவரும் எதோ ஒன்றின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் இருக்கின்றனர். அந்த எதோ ஒன்று, மற்ற அனைத்தின் மீதும் அவர்களை நம்பிக்கை அற்றவராக மாற்றுகிறது. நீங்கள் ஏதாவதொரு மதத்தை விசுவாசித்தால், மற்ற மதங்களை விசுவசிக்கவில்லை. நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால், நீங்கள் நாத்தீகத்தை நம்பவில்லை. மேலும் நீங்கள் ஒரு நாத்தீகவாதி என்றால், ஆத்தீகத்தை நம்பவில்லை. இதில் தெளிவாக இருப்பது மிக முக்கியமானது. நம்பிக்கை சரி என்றோ, அல்லது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே சரி என்றோ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு மக்கள் கூட்டத்தை நம்பிக்கை அற்றவர்கள் என்று அழைப்பது நயவஞ்சகமானது. ஏனென்றால் அனைவருமே ஏதோ ஒன்றில் நம்பிக்கை அற்றவராகவும் வேறு ஏதோ ஒன்றில் நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கிறோம்.

இந்த கட்டுரையில் அந்த கூட்டம் மத நம்பிக்கை அற்றவர்கள் என்று, மத நம்பிக்கை கொண்டமக்கள் ஏளனமாக அழைக்கிறார்கள். நான் அந்த மத நம்பிக்கை அற்றவர்கள் அனைவரும்,  மத நம்பிக்கை கொண்டோரைப்போன்றே திடமான பற்றுடைய நம்பிக்கையாளர்கள் என்று வாதிடப்போகிறேன். ஆனால் அதற்குமுன், நம்பிக்கை என்றால் என்ன? என்றும் அதன் உடற்கூரையும் கற்றுக்கொள்வோம். கீழ்கண்ட வாக்கியமானது, Skeptic வலைத்தளத்தில் உள்ளது .  http://www.skepdic.com/faith.html

“விசுவாசம் என்பது சில கூற்றுகளில் ஒரு அறிவார்ந்த நம்பிக்கை அல்ல. எந்த ஒரு விசுவாசம் அதன் சாட்சியங்களின் தொகுப்போடு எதிரிடையாக இருக்கின்றதோ அது ஒரு அறிவற்ற நம்பிக்கையாகும்.”

விசுவாசம் குறித்து இது ஒரு நியாயமான வரையறை என்று நான் நினைக்கிறேன். பகுத்தறிவற்ற, மற்றும் நிரூபிக்க முடியாத கூற்றுகளின் மீதான நம்பிக்கையே விசுவாசித்தல் என்பதாகும். தர்க்கரீதியாகவோ அல்லது சாட்சியங்களின் மூலமாகவோ நாம் ஒரு கூற்றை நிரூபித்துவிட்டால் அதன்பின் விசுவாசம் என்பது தேவைப்படுவதில்லை. ஏனென்றால் அந்த கூற்று நிருபிக்கப்பட்டுவிட்டதால் அது அறிவாகும்.

சாட்சியங்களே இல்லாவிட்டாலும்கூட, பெரும்பாலான நமது அறிவு தர்க்கரீதியான அடித்தளம் கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள கருங்குழிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஐயன்ஸ்டீனின் பொதுசார்பியல் கொள்கை இந்த கருங்குழிகள்(பிரபஞ்சவெளியில்) இருக்கின்றன என்று கூறுவதற்குமுன் ஒருவர்கூட கருங்குழிகள் பற்றி கேள்விப்படவில்லை. இன்றும்கூட கருங்குழிகளை நம்மால் காணமுடியவில்லை. ஆனால் அவைகள்(பிரபஞ்சவெளியில்) இருக்கின்றன என்று நாம் அறிந்திருக்கிறோம். கருங்குழிகள் என்பது நமது விசுவாசத்தால் கட்டப்பட்டது அல்ல. அவைகள் கணித கணக்கீடுகளால் கட்டப்பட்டது. கணிதம் என்பது தர்க்கம் என்பதின் ஒரு பிரிவாகும். இதே செயல்முறை மூலமாகவே நாம் மாயபருப்பொருள்(Dark Matter), மாயசக்தி(Dark Energy), புழுத்துளைகள்(Worm Holes), பெருவெடிப்பு (Big Bang), மற்றும் இந்த பிரபஞ்சத்தின் வயது போன்றவற்றை அறிந்து கொள்கிறோம். இவை அனைத்திற்கும் எவ்விதமான சாட்சியங்களும் இல்லை. ஆனாலும் அவற்றை உறுதியாக சரி என்கிறோம். காரணம், நாம் நம் கணிதத்தை நம்புகிறோம். எனவே உண்மையை அறிந்து கொள்ள மற்றொரு வழி தர்க்கமாகும் (அது கணிதத்தின் ஒரு பகுதியாகும்).. சாட்சியம் ஒன்றுமே இல்லை என்பது ஒன்றுமே இல்லை என்பதற்கான சாட்சியம் இல்லை.

மற்றொரு வழி சாட்சியங்கள் மூலமாக………………அடிக்கடி காரியங்கள் நம் தர்க்கத்திற்கு எதிராக செல்வதை நாம் காண்கிறோம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் மூதாதேயர்களுக்கு விண்கற்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. விண்ணிலிருந்து கற்கள் விழுவது என்பதை உலகம் பற்றிய அவர்களது புரிதலில் பொருத்திப்பார்க்க இயலவில்லை. அவர்கள் அதை தெய்வீகமானது என்று கருதினார்கள். இது ஒரு சரியான பதில் இல்லை. அபத்தம் தான் என்றாலும் கூட, நம்மால் அந்த நிகழ்வை விளக்க முடியாது என்பதற்காக அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது அதைவிட அபத்தமானது.  நம்மால் புரிந்து கொள்ளமுடியாதவைகளை மருதலிப்பது அறிவுபூர்வமானதல்ல. ஏதாவது ஒன்றை பற்றி நம்முடைய புரிதலுக்கு இணக்கமற்று ஒரு சாட்சியம் நமக்கு கிடைத்தால்,  நம் புரிதலில் எங்கோ பிழை இருக்கிறது என்று அர்த்தம். இன்று விண்கற்களை ஏற்க நாம் தயங்குவதில்லை. காரணம், நாம் வானம் எவ்வாரானது என்று புரிந்து வைத்துள்ளோம்.

quantom-skierநம்மால் புரிந்துகொள்ள இயலாதைவைகளுக்கு குவாண்டம் இயற்பியல் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு பார்வையாளர் ஒரு துகளை காணும்வரை மட்டுமே அந்த துகள் உண்டாயிருக்கிறது. எப்போது அதே பார்வையாளர் அந்த துகளைப் பார்ப்பதை நிறுத்தி விடுகிறாறோ அப்போது அந்த துகள் சூனியத்தில் மறைந்து விடுகிறது. அவைகளால் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடியும். அவைகள் இரண்டாய் பிளந்து இருவேறு வாயிர்க்கதவுவழியாய் சென்று மீதும் ஒன்றாய் ஒரே சமயத்தில் சேர்கின்றன. அவற்றைத் தனித்தனியாய்ப் பிரித்து, இந்த பிரபஞ்சத்தின் இரு வேறு எதிர் எதிர் எல்லையில் கொண்டு வைத்தாலும், ஒன்றை ஒன்று பிணைந்து கொண்டு அவைகளால் ஜோடியாய் இருக்க முடியும். அவைகளால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் எப்போது வேண்டுமானாலும் தோன்றி மறைய இயலும். மேலே சொன்ன எவையும் அறிவுப்பூர்வமாய் இல்லை. இருந்தாலும் ஒருவரும் அவற்றை மறுப்பதில்லை. தர்க்கபிழையாக இருந்தாலும்கூட நம்மால் அவதானிக்கக்கூடியவைகளாய் அவைகள் இருக்கின்றது.

எப்போது நம்மால் அவதானிக்கவோ அல்லது தர்க்கமாகவோ ஒன்று இல்லையோ அதுவே பிழையாகும். அதற்கு இங்கே ஒரு உதாரணம். இந்த Blog ல் தீர்க்கதரிசியின் அடிமை(slave of prophet) என்ற புனைப்பெயர்கொண்ட ஒருவர் இவ்வாறு எழுதினார். (அதை சுருக்கமாக தருகிறேன்) : “அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை கொண்ட, வெகுஜன கொலைகளை செய்த, கற்பழித்த மற்றும் பல குற்றங்களை செய்த என்னுடைய தீர்க்கதரிசியை குற்றப்படுத்துவதற்கு நீ யார்?” அல்லாவின் நம்பிக்கையாளர்களின் தர்க்கத்திற்கு தீர்க்கதரிசியின் அடிமை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. முகம்மதுவைபற்றி அறிவோம் என்ற என்னுடைய புத்தகத்தில், இவர்களின் பகுத்தறிவை விரிவாக விளக்கியுள்ளேன். ஒரு நம்பிக்கையாளர், உண்மை எனும் அளவுகோளால் தன் நம்பிக்கையை அளப்பதில்லை. மாறாக, உண்மையை தன் நம்பிக்கையால் அளக்கிறார்.

பெருமதிபிற்குரிய இமாம் கஜாலி(1058-1111)இவாறாக சொன்னார் : “எப்போது பொது அறிவின் கோரிக்கைகள் வெளிப்படுத்துதலோடு முரண்பாடுகிறதோ, அப்போது பொதுஅறிவு,  வெளிப்படுத்துதலோடு விட்டுக் கொடுக்கவேண்டும்”.  இதே போன்றதொறு கருத்தாய்வை Paul in 1 Cor. 1:20-25 கூறினார். அவர் சொல்வது என்னவென்றால், “கடவுளின் அறிவீனம் என்பது மனிதரின் ஞானத்தைவிட சிறந்தது”.  பவுலின் மேற்சொன்ன இந்த பகுதி தான் Tertullian கூற்றுக்கு அடித்தளம். Tertullian அந்த கூற்று “Credo quia absurdum” “அது அபத்தமானது, எனவே நான் அதைநம்புகிறேன்” .

(Tertullian

Carthaginian theologian who converted to Christianity (c. 193), broke with the Catholic Church (c. 207), and formed his own schismatic sect. His writings greatly influenced Western theology.)

DCC 5ல் அவர் இவ்வாறு கூறுகிறார் : “கடவுளின் மகன் இறந்துவிட்டார்; மனபூர்வமாக நாம் அதை நம்பவேண்டும், காரணம் அது ஒரு அபத்தம்(stupidity) ”

Fideism (Reliance on faith alone rather than scientific reasoning )

Fideism மானது, அபத்தத்தை விசுவசிப்பது என்பதை கொண்டு கட்டப்பட்டது. மேலும் எல்லா நம்பிக்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலையும் அதுவே தான்.

கண்ணை மூடிக்கொண்டு விசுவசிப்பது என்பது மத நம்பிக்கையுள்ள மக்களுக்கே ஆனது மட்டுமல்ல. தத்துவஞானி David Hume அவர்களின் இந்த பகுதியை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். யாராவது ஒருவர் இறந்த மனிதன், உயிரோடு வந்ததை நான் கண்டேன் என்று எப்போது என்னிடம் சொல்கிறாரோ, நான் உடனடியாக சிந்தித்து என்னிடமே வினவுவது என்னவென்றால்,” இந்த மனிதர் ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாந்துவிட்டாரா அல்லது அவர் சம்பந்தப்படுத்தி பார்க்கும் இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா?   நான் ஒரு அதிசயத்தை மற்றொரு அதிசயத்தின் மூலமா எடையிடுகிறேன். அவற்றின் மேன்மையைகொண்டு நான் அவற்றை கண்டுகொண்டு உச்சரிக்கிறேன். எப்போதும் நான் மேலான அதிசயத்தை நிராகரிக்கிறேன். அவரது சாட்சியத்தின் தவறான கூற்று, அவர் சம்பந்தப்படுத்திக் கூறுகின்ற ஒரு நிகழ்வைக் காட்டிலும் பெரிய அதிசயமாக இருக்கலாம். பின்போ அல்லது அதற்கு முன்வரையோ, அவர் என்னுடைய நம்பிக்கை அல்லது என் கருத்தைபற்றி கட்டளையிடுவது போல் நடிக்கலாமா?

Hume மற்றும் Al Ghazzali இருவரும் இருவேறு சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள். மேலும் அவர்களின் தளங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. மிக அருகில் சென்று நாம் கூர்ந்து நோக்கினால் இருவர் கூறுவதும் ஒன்றே என்பது நமக்கு வெளிப்படுகிறது. எந்த ஒரு விவாதம் அதிசயமானது போல் தோன்றுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று Hume சொல்கிறார். அதாவது, அந்த விவாதத்தை பகுத்தறிவால் விளக்க முடியாது என்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது நாம் குவாண்டம் இயந்திரவியலை நிராகரிக்கவேண்டும். குவாண்டம் இயந்திரவியலைவிட இயற்கைக்கு புறம்பான அதிசயமான ஒன்று வேறில்லை. ஆனாலும் நாம் அதை தவறவிடுவதில்லை. நமக்கு அவை புரிவதில்லை. காரணம், யதார்த்தம்(reality) எவ்வாறு இருக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை.

மறுஉலக வாழ்வு எனும் தத்துவத்தை கணித ரீதியாக நிரூபிக்க முடியாது. ஆனால் அது இருக்கிறது என்பதற்கு அபரிமிதமான சாட்சியங்கள் இருக்கின்றன. ஏன், கடவுள் இருக்கிறார் என்றும், மறுஉலக வாழ்வு உண்டு என்றும்(இப்போது) நான் நம்புகிறேன் என்றால், NDE(Near Death Experience/இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) உண்மையானது. அது ஒரு கற்பனை அல்ல. அது ஒரு புறநிலையான ஒன்று என்பதற்கு நிறுபனமாக சரிபார்க்கப்படக்கூடிய நிகழ்வுகள் உள்ளன. அவற்றின் காணொளியை நான் பதிவிட்டு இருக்கிறேன்.

  • அறுவை சிகிச்சையின் போது மயக்கமாக இருந்த ஓர் பெண்மணி, அறுவை சிகிச்சை குழுவினர் என்னபேசினார்கள் என்றும், என்னவிதமான அறுவை சிகிச்சை கருவிகள் அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று துல்லியமாக விவரிக்கிறார்.
  • ஒரு குழந்தை இறந்து தன் சகோதரியை சந்திக்கிறது, …………(தன் தாய்க்கு தான் பிறக்கும் முன்பே ஒரு கரு கலைந்து விட்டதை யாரும் அந்த குழந்தைக்கு தெரிவிக்கவில்லை.)
  • ஒரு பெண் இறந்து மருத்துவமனை கட்டிடத்தை மிதந்து சுற்றி வருகிறாள். அவள் டென்னிஸ் விளையாட்டு காலனி ஒன்றை லேஜரில் காண்கிறாள். அந்த பெண் விவரித்தது போலவே, அதே இடத்தில் அந்த காலனிஇருந்தது.
  • ஒரு மாரடைப்பு நோயாளி மருத்துவமனைக்கு சுயநினைவற்ற நிலையில் கொண்டு செல்லப்பட்டார். அவர் தன் பொய்ப்பல்லை கழட்டி எடுத்த செவிலியப் பெண்ணையும், அவர் எங்கே அதை வைத்தார் என்பதையும் அடையாளம் கண்டு கொண்டார்.
  • பல அறுவை சிகிச்சை நிபுணர்கள், தங்களது நோயாளிகள் மருத்துவரீதியாக இறந்த நிலையில் அறுவை சிகிச்சைகுழு என்ன பேசினார்கள் என்று துல்லியமாக விவரித்தார்கள் என்று சாட்சி சொல்கின்றனர்.
  • ஒரு இரண்டு வயது பையன் போன பிறவியில் தான் ஒரு விமானி என்றும் தான் ஜப்பானியர்களால் கொல்லபட்டதாகவும் நினைவு கூறுகிறான். அவன் தன் கப்பலின் பெயரையும், தன் கடற்படை நண்பனின் பெயரையும் கூறுகிறான். அந்த சிறுவனின் பெற்றோர்கள், அவன் நண்பன் என்று சொன்ன 80 வயதில் இன்னும் உயிரோடிருக்கும் அவரையும் மற்றும் அவன் சொன்ன அனைத்தையும் சரி பார்கிறார்கள்.
  • ஒரு பிறவி குருடான பெண்மணி தான் NDE யின்போது முதல்முறையாக பார்த்ததாக கூறுகிறார்.
  • ஒரு அதிருப்தி ரஷிய விஞ்ஞானி KGB யால் கொலை செய்யபடுகிறார். அவர் தன் NDE யின்போது தன் நண்பனின் குழந்தையைக் கண்டு டெலிப்பதி(telepathy) மூலமாக உரையாடுகிறார். அவர் தன் நண்பனின் குழந்தைக்கு இடுப்பு உடைந்திருப்பதை அறிந்து கொள்கிறார். அவர் தான் உயிரோடு வந்தபின் இவற்றை தன் நண்பனுக்கு தெரியப்படுத்துகிறார். X –RAY அந்த குழந்தைக்கு எலும்பு முரிவு உள்ளதை காண்பித்தது.
  • ஒருபெண், தன்னை அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரின் மனதில் அவர் சொன்ன ஜெபத்தை கேட்கிறார். உயிரோடிருக்கும் அவரின் சகோதரிக்கு ஆவியாய் தோன்றி தான் குணமடைந்து விடவேண் என்று சொல்வதை தன் OBE யில் கண்டதாக விவரிக்கிறார்.

மருத்துவர்களிடருந்தும் நோயாளிகளிடமிருந்தும் வரும்  இவைகளும் இது போன்ற எண்ணற்ற பல அறிக்கைகளும், NDE என்பது உண்மைதான் என்பதற்கு அபரிமிதமான சாட்சியமாகும். மறுதலிப்பதின் மூலமாக நாம் இவற்றை தள்ளுபடி செய்யக்கூடாது.

ஆக்ஸிஜென் குறைபாட்டால் மூளையானது செழுமையான, கற்பனைக்கெட்டாத யதார்த்தமான அனுபவங்களை தருகிறது என்ற அபத்தமான தர்க்கத்தால் அவை ஒன்றையும் விளக்க முடியாது. கேலிக்கிடமான இந்த தத்துவத்தை, பரிணாமவளர்ச்சி வெளிச்சத்தினால் விளக்கவேண்டும். ஆதாரமற்ற இந்த தத்துவத்தை நாம் நம்பினாலும்கூட, மேலே கூறிய உண்மை யென சரிபார்க்கப்பட்ட நிகழ்வுகளை விளக்க அந்த தத்துவத்தால் இயலவில்லை. சரிபார்க்கப்பட்டது என்றால், இந்த அனுபவங்கள் எல்லாம் இறந்துகொண்டிருக்கும் மூளையின் பிரம்மைகள் அல்ல. அவைகளுக்கு சாட்சியாக மற்றவர்களும் இருக்கின்றனர்.

பொருள்முதல்வாதமும் (materialism), மற்ற மதங்களைப்போல் விசுவாசத்தின்மேல் கட்டப்பட்ட ஒரு மதம். சாட்சியங்களை நாம் வழங்கும்போது பொருள்முதல்வாதிகள் (materialists), மதவெறி பிடித்த அடிப்படைவாதிகள் போலவே அவற்றை திரித்து மறுதலிக்கிறார்கள்.  NDE என்ற நிகழ்வுகள் லட்சக்கணக்கில்(millions)  நடைபெறுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், நாத்தீகன், ஆத்திகன், அனைத்துவித இனம்,   மற்றும் கலாச்சாரங்கலிலும் உள்ளவர்களால் சொல்லப்படுகிறது. இணையதளம் http://near-death.com/forum.html யில் NDE குறித்தான கதைகள் ஆயிரக்கணக்கான தொகுப்புகள் உள்ளது. நாம் அனைத்தையும் தள்ளுபடி செய்தாலும்கூட, சரிபார்க்கப்பட்டவற்றை நம்மால் நிராகரிக்க முடியாது. கூடுதலாக இறந்துகொண்டிருக்கும் ஒரு நபரின் சொந்தங்கள் அனுபவித்த NDE அனுபவங்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருகின்றன. Dr.Raymond Moody, தங்களின் அன்பு சொந்தங்களின் NDE யில் பங்குபெற்றதாக  கூறிய முந்நூற்றுக்கும் மேற்பட்ட  நபர்களின் பேட்டிகள் கண்டிருக்கிறார்.

குழந்தைகள், பெரியவர்கள், விசுவாசிகள், நாத்திகர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் ஒரு சதித்திட்டம் தீட்டுவதாக மறுதலிப்பவர்கள் சொல்லவில்லை என்றால், மணலில் நமது தலைகளை மறைத்து கொள்ளாமல், மாறாக அதை புரிந்து கொள்ள முயற்சிசெய்து,  NDE என்பது உண்மை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை இது ஒரு உருமாதிரிக்கான நேரமயிருக்கலாம்.  தர்க்கரீதியில் விவரிக்க முடியாத கடவுள் இருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டியதாகிவிடும் என்பதற்காக அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க முடியாது என்கிறார்கள்.

ஏற்கனவே ஒன்றை முடிவு செய்தவர்கள் மனதில் எந்த உண்மையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விசுவாசம் என்பது ஒருமன நோய். விசுவாசம் குருடாக்குகிறது. ஒருவர் ஆத்திக விசுவாசியோ அல்லது நாத்திக விசுவாசியோ எதுவானாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஒரு நம்பிக்கையின் தன்மைதான் ஒருவரை உண்மைகளை காணவிடாமல் தடுக்கிறதே தவிர, அந்த நம்பிக்கையின் உள்ளடக்கம் அல்ல.

ஒருவர் மற்றவர்களின் விசுவாத்தை கேள்வி கேட்பதினாலேயே நம்பிக்கை கொள்ளாதவராக ஆவதில்லை. ஆனால் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள். தான் விசுவாசிக்கும் ஒன்றையே எவரால் கேள்வி கேட்கமுடிகிறதோ அவர்தான், நம்பிக்கை கொள்ளாதவர் என்பவர். இதுவே தீர்க்கதரிசிக்கும் ஞானம் அடைந்தவர்களுக்குமான தரக்குறியீடு.  குப்பனும், சுப்பனும், குமாரும், அந்தோனியும் நம்பிக்கை கொள்ளாதவர் ஆக முடியாது.  மற்ற மக்களின் விசுவாசத்தை மட்டுமே குறை சொல்கின்ற மனிதர்கள் அவர்கள் இகழ்ந்துரைகின்ற மத நம்பிக்கையாலரைப் போலவே அவரும் ஒரு விசுவாசியாவார்.

பிபிசி யினால் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படம் NDE ஐயும் மனிதர்கள் மீதான அதன் தாக்கத்தையும் பற்றிய அருமையான குறும்படம்ஆகும் :

 

—- அலி சினா (Ali Sina)

மொழியாக்கம் : அந்தோணி (Anthony)

நாம் கடவுளை கண்டு அஞ்ச வேண்டுமா?

Image Posted on Updated on

அன்புடையீர்,

என் மனைவி, நான் மற்றும் எங்கள் குழந்தைகள் சேர்ந்து, 14-07-2013 அன்று இஸ்லாமை துறந்தோம். எங்களது முடிவை குறித்து அன்றைய பகல் பொழுதில் சந்தோசமாக இருந்தோம். ஆனால் இரவில் நாங்கள் அல்லாவுக்கு எதிராக பாவம் செய்து விட்டோம், அதற்காக அவரால் தண்டிக்கப்படுவோம் என்று சிந்திக்கலானோம். இந்த சிந்தனையில் இருந்து சமாளிக்க தாங்கள் எங்களுக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மறுபடி இந்த புதைகுழியில் நான் கால் வைக்கமாட்டேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த என் முடிவை பகிரங்கமாக அறிவிக்காதலால், இது ஒரு முக்கியமான பிரச்சனையாகும். என் தந்தை இதற்க்கு சம்மதிக்காமல் போனால் ஒருவேளை நான் அவரை இழக்க நேரிடும். நான் என்ன செய்வது? என் மனைவி இடம் இருந்து எனக்கு பிரச்சனை இல்லை. அவள் என் பக்கம். மேலும் என் மனைவி இந்த போலி மதத்தை (இஸ்லாம்) நம்புவதில்லை. அவள் கடந்த காலத்தை மறந்து விட்டு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என விரும்புகிறாள்.

அன்புடன் நிஜாம்

(உண்மை பெயர் அல்ல )

holographic-universe

அன்புள்ள நிஜாம்,

உங்கள் மின்னஞ்சலில் இரண்டு கேள்விகள் உள்ளன. நான் தங்களது இரண்டாவது கேள்விக்கு பலமுறை விளக்கமளித்துவிட்டேன். தாங்கள் தங்கள் குடும்பத்தாரிடம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர்களை வேதனை அடையச் செய்வதினால் பயன் என்ன? மேலும் இக்கட்டான ஒரு சூழ்நிலையை நாம் ஏன் உருவாக்க வேண்டும்? மத வழக்கங்களை கடைபிடிக்காத ஒரு நம்பிக்கையாளர் குறித்து ஒரு முஸ்லிம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.  நீங்கள் ஒரு நம்பிக்கையாளரே இல்லை என்பதே முஸ்லிமுக்கு பிரச்சனையானது. உங்கள் மத நம்பிக்கை தவிர்த்து மற்றபடி உங்கள் குடும்பத்தோடு உறவு பாராட்டுங்கள். எப்போது நீங்கள் அவர்களை வரவேற்கும் பண்புடையவர்களாய் காண்கிறீர்களோ அப்போது மெல்ல மெல்ல அவர்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் மத நம்பிக்கைகள் உங்கள் அன்பான குடும்ப உறவுகளை சிதைக்க அனுமதிக்காதீர்கள். நாம் மற்றவர்களுக்கு ஆன்மிக குருவாக வலம் வருவதற்காக இந்த உலகத்திற்கு வரவில்லை. நாம் இங்கே அன்பு செய்வதற்காக வந்துள்ளோம். குறிப்பாக நம் உற்றார் உறவினரை.

கடவுளின் தண்டனை பற்றிய உங்கள் பயம், ஒரு ஆதாரமற்றபயமாகும். கடவுள் உங்களை தண்டிப்பதில்லை. நீங்கள் பாவம் செய்தாலும் கடவுள் உங்களை நீதி தீர்ப்பதில்லை. தீர்ப்பு என்ற ஒன்று கடவுளிடம் இல்லை. அன்பே கடவுள். ஆம் ……. அன்பு – எல்லையற்ற ஒரு அன்பு. அனைத்தையும் ஏற்றுக்கொள்தலே கடவுளிடம் உள்ளது. எவ்வாறு சூரியனில் நிழல் இல்லையோ அவ்வாறே, பழிவாங்குதலும் கடுங்கோபமும் கடவுளிடம் இல்லை.

நான் வளர்த்த பூனையை நிபந்தனையற்ற அன்பு செய்தேன். அதன்மேல் உள்ள என் அன்பு குறையும்படியோ அல்லது அதை தண்டிக்கும்படியோ செய்யக்கூடிய, ஒன்றையும் அந்த பூனையால் செய்ய முடியாது. அதனுடைய இறப்பு மன வேதனை அளிக்ககூடிய ஒரு இழப்பு. நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு வாகனத்தில் விபத்திற்குள்ளானபோதிலிருந்து என் மனம் அதற்காய் ஏங்குகிறது. இரவு நேரங்களில் நான்உறங்குவர்தற்காக கண்களை மூடும்போது, அது என் காலடியில் உறங்குவதாக கற்பனை செய்துகொள்வேன் – என் காலடியே உறங்குவதற்கு அதற்கு மிகவும் பித்தமான இடம். நான் ஒரு தவறுகள் செய்யக்கூடிய பலவீனமான மனிதன். மேலும் அந்த மிருகம் எனக்கு சொந்தமும் இல்லை. ஒரு மனிதனால் ஒரு விலங்கை இத்தனை அதிகமாக அன்பு செய்ய முடியுமென்றால், கடவுள் என்ற நிபந்தனையற்ற அன்பு செய்யக்கூடிய ஒரு பூரணம் ,  தன்னுடைய சொந்த படைப்பை இன்னும் எத்தனை அதிகமாக அன்பு செய்யும்!

கடவுளின் கடும் கோபம் குறித்து பேசுபவர்கள் எல்லாம் கடவுள் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். பயத்தின் மூலமாக உங்களை கட்டுப்படுத்த நினைக்கும் ஒருபொய்யர், ஒரு  ஏமாற்றுக்காரர்.

ஆன்மீக போதனைகள் மற்றும் சித்தாந்தங்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள நாம் கடவுளின் தன்மை குறித்து அறிந்து கொள்ளவேண்டும். கடவுள் என்பது ஒரு பரிசுத்தமான அன்பு மற்றும் பரிசுத்தமான உணர்வுமாகும். நம்முடைய இயல்பிலிருந்து கடவுளின் இயல்பு வேறானதல்ல. நாம் கடவுளின் சாயலாகவே படைக்க பட்டிருக்கிறோம். கடவுளை பற்றி அறிந்து கொள்ள நாம் செய்யவேண்டியது என்னவென்றால், அவரை நாம் நம் ஆன்மாவில் தேட வேண்டும். கடவுளை காணவேண்டும் என்றால், நீங்கள் வானத்தை பார்க்க வேண்டாம். நீங்கள் உங்களில் உள்ளே தேடவேண்டும். நாம் எப்போது நம்முடைய உணர்வை முயன்று முயன்று அதிகமாக அடைகிறோமோ, நாம் அப்போது அன்பில் அதிகமாக வளர்கிறோம். அப்போது நாம் அதிகமாக கடவுளாகிறோம்.

நாம் இரட்டை தன்மை உள்ளவர்கள். ஒன்று மிருகத்தன்மை, மற்றொன்று ஆன்மிகத் தன்மை. பயம், பொறாமை, கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறையான உணர்வுகளை நாம் மிருகத்தன்மையிலிருந்து இருந்து பெறுகிறோம். அன்பு, ஆனந்தம், இரக்கம், கருணை, அமைதி, நம்பிக்கை போன்ற ஆன்மாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அனைத்தும் நம் ஆன்மிகத்தன்மையில் இருந்து வருகிறது. உங்கள் ஆன்மிகத் தன்மையை நீங்கள் உற்று நோக்கினால், கடவுளை காண்பீர்கள். கடவுள் எங்கோ வெளியில் இல்லை. இங்கே உங்களில் இருக்கிறார். கல்லினாலும் மண்ணாலும் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் கடவுளின் கோவிலாகாது. நீங்களே கடவுளின் கோவில். உங்கள் இருதயமே கடவுளின் அரியணை. எனவே கடவுள் உங்கள் கோவிலை ஆட்கொள்ளும்படி அவரது அரியணையை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வைப்பது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆதவன் எங்கெங்கு காணினும் ஒளிர்கிறது. ஆனால் உங்களுடைய கண்ணாடி தூசி படிந்து அழுக்காக இருந்தால் அது பிரதிபலிக்காது.

இயேசு அவரை கடவுளின் மகன் என்றார். அவரேதான் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றார். குழந்தைகள் தகப்பனை ஒத்திருக்கின்றன. நாம் எவ்வாறு நம் சரீர சம்பந்தமான நம் தந்தையின் மரபணுக்களை நம் சரீர சம்பந்தமான உடலில் தாங்கி வருகிறோமோ, அவ்வாறே நாம் கடவுளின் ஆவியை நம் உடலில் கொண்டிருக்கிறோம். நாம் நம் தந்தையைப் போல் இருக்கிறோம். ஏனென்றால் நம் உடலில் உள்ள பாதியளவு மரபணுவானது அவரிடம் இருந்து வந்தது. நாம் நம் தாயைப்போல் இருக்கிறோம். ஏனென்றால் நம் உடலில் உள்ள பாதியளவு மரபணுவானது அவரிடம் இருந்து வந்தது. ஆனால் நம்முடைய ஆன்மீக சாரம் கடவுளிடம் இருந்து வந்தது. நாம் கடவுளின் குடியேறிகள். நம்முடைய ஆன்மாவும் கடவுளின் ஆன்மாவும் ஒன்றாகும். சமுத்திரத்தில் உள்ள ஒரு துளியைப்போலவே நாமும் ஒரு கடவுள்.

முஹம்மதும் முஸ்லிம்களும்…….. ஏசுவும் கடவுளும் ஒன்று என்று கிறிஸ்தவர்கள் விசுவசித்தபோது அவர்களை ஏளனம் செய்தனர். இது கடவுள் பற்றிய அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தியது. முஹம்மது கடவுள் ஒரு எதேச்சதிகாரி என்றும் தான் விரும்புவதை செய்யும் என்றும்  தன்னைப்போன்றே கடவுளுக்கும் ஒரு சட்ட திட்டமில்லை என்றும் எண்ணினார். அவரின் பரிதாபப்பட்ட புனிதமான வாழ்க்கை தத்துவத்தில், கடவுள் ஒரு சர்வாதிகாரி மற்றும் நாம் அனைவரும் அவரின் அடிமைகள். அந்த அறியாமை நிறைந்த மனிதன், கடவுள் என்றால் என்ன என்று அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு ஆன்மீக அறிவிலி. அவர் ஒரு (அஞ்ஞான) இருளில் சிக்கி கொண்ட ஒரு ஆன்மா. இதில் சோகம் என்னவென்றால், 1.5 பில்லியன் மக்கள் தூக்கி எறியப்பட்ட  ஒரு ஆன்மீக முட்டாளின் ஆன்மாவிடம் இருந்து ஆன்மீக வழிகாட்டுதலையும் ஆன்மீக நுண்அறிவையும் தேடுவதாகும்.

இயேசு கடவுளின் தன்மையை புரிந்து கொண்டார். இயேசு மட்டும் கடவுள் இல்லை. நீங்களும் நானும் கடவுள் தான். அனைத்தும் கடவுள் தான். இந்த பிரபஞ்சமே கடவுளின் பிரதிபலிப்பு தான். பல்வேறு அலைவரிசையில் இருக்கும் நாம் அனைவருமே கடவுளின் ஒளிதான்.

 

prism2

நியூட்டன்  சூரியனில் இருந்து வரும் ஒரு வெள்ளை ஒளிக் கற்றையை பிரித்து ஏழு நிற ஒளிகற்றையை காண்பித்தார். மிக அதிகமான வண்ண ஒளி கற்றைகள் இந்த வெள்ளை ஒளியில் உள்ளது. ஆனால் நம்மால் ஏழு நிறத்தை மட்டுமே காண முடியும். இந்த ஏழு நிறங்கள் இணைந்து பல பில்லியன் நிறங்களை நமக்கு காண்பிக்கின்றன. மேலும் அவற்றில் மில்லியன் நிறங்களை நாம் நம் கண்களால் வேறுபடுத்தி கண்டுணர முடியும். இந்த உலகத்தை மிக அழகுடனும் பல்வேறு விதமாகவும் வெளிபடுத்தும் இந்த நிறங்களின் சாராம்சம் அடிப்படையில் ஒன்றே. அவை அனைத்தும் சூரியனின் பிரதிபலிப்பே. அது போலவே நம்முடைய ஆன்மீக சாரமும் மற்றும் எல்லா உயிர்களின் ஆன்மீக சாரமும்(விலங்குகள், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின்) – கடவுளிடம் இருந்து வந்தவையே. அனைத்துமே கடவுளின் வெளிப்பாடாகும் – அதாவது அவரின் பிரதிபலிப்பு. அனைத்துமே கடவுள். கடவுளைத் தவிர வேறொன்றும் இல்லை.

கடவுள் என்றால் என்ன? கடவுள் என்றால், தூய்மையான உணர்வும் தூய்மையான அன்புமாகும்.

பல வருடங்களுக்கு முன்னால், எனக்கு ஒரு பிரத்யேகமான அனுபவம் உண்டானது. நான் ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு சில வினாடிகள் தூய்மையான உணர்வின் (உன்னதமான ஞானம் ) உலகம் எனக்கு காண்பிக்கப்பட்டது. நான் என் தலையில் இருக்கும் இரண்டு கண்களால் எதையும் காணவில்லை. மேலும் நான் என் காதுகளால் ஒன்றையும் கேட்கவில்லை. ஆனால் அது இந்த பிரபஞ்சத்தின் முழு அறிவையும் என்னால் அணுகக்கூடியது போன்று இருந்தது. மிகசரியாக இதை விவரிக்க வேண்டும் என்றால், அறியப்படாத எங்கும் இருள் நிறைந்த ஒரு இடத்தில் நான் நின்று கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது திடீரென்று ஒரு மின்னல். சில வினாடிகள் அனைத்தும் பிரகாசமாக ஒளிர்கின்றன. அந்த சில நொடிகள் என்னை சுற்றி நம்ப முடியாத அற்புதமான காட்சிகளை கண்டேன். அது ஒரு காட்சி அனுபவம் அல்ல. மாறாக, முழு உணர்வோடு பெற்ற ஒரு அனுபவம். நம் அனைவருக்கும்     பழக்கமான “ஆஹா” என்பது போன்ற ஒரு தருணம். இதுவும் அது போன்ற ஒன்று தான். ஆனால் எல்லையில்லாதொரு சக்தியோடு இருந்தது. எதோ ஒரு சிறு விளக்கு அல்ல. ஒரு சூரியனே என் தலையினுள் கடந்து சென்றது.

அந்த சுருக்கமான நேரத்தில், பொருட்கள் அனைத்துமே உணர்வாக உள்ளது என்று புரிந்துகொண்டேன். மேலும் அதிகமானவற்றை  தன்னுள் ஈர்த்துக்கொள்வதற்கு தொடர்ந்து அது போராடுகிறது என்றும் கண்டேன். பொருட்கள் வேறுவேறு படிநிலைகளில் உள்ளது என்பதை நீங்கள் காணவேண்டும். ஒரு பாறை, ஒரு மரம், ஒரு பூனை மற்றும் ஒரு மனிதன் அனைத்தும் இயற்பியல் இருப்பை கொண்டுள்ளது. உயர்வான ஒன்றில் காணப்படுகின்ற ஒரு இருப்பு நிலையானது, தாழ்வான ஒன்றில் காணப்படவில்லை. ஒரு மரத்தில் காணப்படுகின்ற ஒரு உயிர் பாறையில் காணப்படவில்லை.  பூனைக்கு புலன்கள் உண்டு. ஆனால் அவை மரத்திடம் காணப்படவில்லை. மிக உயர்வானதொரு உணர்வு மனிதர்களிடம் உள்ளது. அவை பூனையிடம் காணப்படவில்லை. எனவே பூனையைக் காட்டிலும் மனிதனின் நிலை உயர்வானது. மரத்தைக் காட்டிலும் பூனையின் நிலை உயர்வானது. பாறையை காட்டிலும் மரத்தின் நிலை உயர்வானது. உயர்வான நிலைக்கு பொருட்கள் நடத்தும் போராட்டமே பரிணாமம் என்பது.

இந்த அனைத்து படிநிலைகளின் மூலம் எது? முடிவற்ற யதார்த்தமே அது. வெறுமையே அனைத்தின் தாயாகும். அது ஒருமனிதம் அல்ல. ஆனால் அது ஒரு யதார்த்தம். அதுவே அனைத்தின் மூலம். அது புனிதமான உணர்வு (Consciousness/ஞானம்) மற்றும் புனிதமான அன்பு. இந்த புனிதமான உணர்வில்தான் (Consciousness/ஞானம்) இந்த பொருள் இருப்புநிலையே நிறுவப்பட்டுள்ளது. உணர்வே உயிரற்ற ஒன்றை உயிருள்ளதாக மாற்றுகின்றது. அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டுமல்ல, அனைத்துமே  உயிரும் புலன்களும் கூட  இந்த உணர்வின் ஆதரவில் இருக்கின்றவைதான்.

பொருள்நிலை(matter) அதிகமாக பரிணமிக்கும்போது, அது அதிகமாக கடவுளை பிரதிபலிக்கிறது. பொருள்நிலையில் உள்ள சிக்கலான கட்டமைப்பு, கடவுள்போல் ஆக தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு, உயர் நிலையை முயன்று அடைகிறது. பொருள் நிலை என்பது கடவுளின் கண்ணாடியாகும். மேலும் கடவுள் என்பது உணர்வாய் இருப்பதால், மேல்அதிக உணர்வை பெறுவதே பொருள்நிலையின் போராட்டம். அடைய வேண்டும் அல்லது கூடாது என்பது பொருள்நிலை மற்றும் பரிணாமத்தின் பின்னிருக்கும் சக்தியின் குழப்பம். இந்த பேராவலே நட்சத்திரங்கள், கிரகங்கள், உயிர் மற்றும் அறிவை முன்னெடுத்து செல்கின்றன. உயிரற்றவை பிரபஞ்ச உணர்வின் பொருளாக எப்போது விழிப்புணர்வை அடைகிறதோ அப்போது அவை உயிர் பெறுகின்றன.

கிரகிக்கும் இயந்திரம் போன்றே அனைத்தும்உள்ளன என்று நான் புரிந்து கொண்டேன். இயந்திரமான ஒரு கணிணிக்கும் ஒரு வானொலிக்கும் இடையேயான வித்தியாசம் என்னவெனில், கணினி என்பது பழச்சாறுபிழியும் ஒரு இயந்திரம் போன்றது. வானொலி என்பது ஒரு கிரகிக்கும் இயந்திரம் போன்றது. அது நம் புலன்களால் உணர இயலாத அலைகளை கிரகித்து அவற்றை நாம் கேட்க கூடிய ஒலியாய் மாற்றுகிறது. அதுவே நாம் அனைவரும். நாம் ஒரு கணிணி மட்டுமல்ல,  நாம் ஒரு கிரகிக்கும் இயந்திரம் கூடத்தான்.

இந்த கிரகிக்கும் இயந்திரமானது பரிணாம வளர்ச்சியில் பல கட்டங்களை கடந்து வருகின்றது. பரிணாம வளர்ச்சியில் உயர்நிலை அடையும் போது அது வெளிக் கொண்டுவரும் ஒலி மிக துல்லியமாகின்றது. தொலைக்காட்சிப் பெட்டியை , வானொலியின் பரிணாம வளர்ச்சியடைந்த பொருளாக நினைத்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் தொலைகாட்சி பெட்டி கருப்பு வெள்ளையாய் இருந்தது. பின் அவை பரிணாம வளர்ச்சியடைந்து வண்ண தொலைக்காட்சிப் பெட்டியானது. ஆனால் இன்றுள்ள தொலைகாட்சி பெட்டியோ சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மிகத்துல்லியமான வண்ணங்களை காண்பிக்கின்றது. இதற்கு மேல் வளர்ச்சியில்லை என்று நினைக்க எந்த காரணியும் இல்லை. எதிர்காலத்தில், உள்ளது உள்ளபடி காணக் கூடிய முப்பரிணாம தொலைகாட்சி பெட்டி கூட வர முடியும்.

பொருட்களும் இது போன்றதொரு பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுகின்றன. மிக உயர்ந்த பரிணாம வளர்ச்சி நிலையை அடையும் போது, மிக சிறந்த கிரகிக்கும் ஒரு இயந்திரமாக அது மாறுகிறது. ஆனால் அது எதை கிரகிக்கிறது என்பதே முக்கியமானது. இருப்பு நிலை, உயிர், புலன் மற்றும் உணர்வு இவற்றை ஒளிபரப்பும் அந்த நிலையம் எங்கே இருக்கின்றது. இந்த ஒளிபரப்பு நிலையமே அனைத்தின் மூலமாகும். சிலர் அதை கடவுள் என்கிறார்கள்.

நாம் அனைவரும் இங்கே இல்லை. ஒன்றுமே இங்கே இல்லை. நீங்கள் காண்பது ஒரு கானல் நீர் அல்லது போலியான தோற்றம். நமது யதார்த்தம் வேறு எங்கோ இருக்கின்றது. நாம் ஒருபோதும் அந்த மூலத்தை விட்டு விட வில்லை. நாம் ஒரு போதும் பிறப்பதும் இல்லை, ஒரு போதும் இறப்பதும் இல்லை. நாம் கடவுளோடு தான் இருக்கின்றோம். மேலும் என்றென்றும் அவருடனேயே இருப்போம். Pierre Teilhard de Chardin சொன்னது போல், மனிதத்தை அனுபவிக்கும் ஒரு ஆவியான ஆன்மாக்கள் நாம். நித்திய ஜீவன் உள்ள கடவுளை போன்று, நாமும் கடவுள். இப்போது இவை அனைத்தும் விசித்திரமானதாக, பொருளற்றதாக  தோன்றும். ஆனால் இதுவே பிரபஞ்சத்தின் தத்துவம் குறித்து, அதிகமான முன்னணி தத்துவார்த்த இயற்பியலாளர்கள்(theoretical physicists)  ஏற்றுக்கொள்ளும் ஒரு தத்துவமாகும்(theory). அவர்கள் இந்த பிரபஞ்சமே ஒரு முப்பரிமாண படிமம்(3D Image) என்கிறார்கள். நம்மை மனிதனாக மாற்றும் தகவல்கள் வேறு எங்கோ இருந்து வருகின்றன. அதாவது பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள எதோ ஒன்றிலிருந்து. அதை கடவுளென்றோ(God), மூலமென்றோ(Source), முடிவற்ற  ஞானமென்றோ(Infinite Wisdom) அல்லது வேறு ஏதாவதொன்றோ நீங்கள்அழைக்கலாம்.

இந்த அனுபவத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட அனைத்தும் மெய்மை குறித்து நான் தெரிந்து வைத்திருந்த அனைத்திற்கும் எதிராக இருந்தது. மூளை ஒரு கணிணியைப் போல் செயல்படுகிறது என்பதே என் புரிதலாகும். அது நமது எண்ணங்களையும் அனுபவங்களையும் உருவாக்குகின்றது. என் அனுபவத்தில் ஏற்பட்ட  நாம் அனைவருமே ஒரு கிரகிக்கும் இயந்திரம் தான் எனும் ஒரு யோசனை மிகவும் வினோதமானதாக இருந்தது. அதைப் பற்றி நான் அதிகமாக சிந்தனை செய்தேன். இயற்பியல் இந்த அனுபவத்தை உறுதி செய்கிறது என்பதை  சமீபத்தில் தான் என்னால் கண்டு பிடிக்க முடிந்தது.

அனைத்துமே கடவுளின் பிரதிபலிப்பாகும். பரிணாமத்தில்  உயர் நிலையை அடைந்த நாய் என்ற விலங்கு வெளிபடுத்துகின்ற ஒரு மகத்தான அன்பு, கடவுளிடம் உள்ள நிபந்தனையற்ற பொதுவான அன்பின் பிரதிபலிப்பாகும். ஆம், இந்த உன்னதமான விலங்கு மனநிலை பாதிப்புக்காளான முகம்மதால் மிக அதிகமாக வெறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த முஹம்மதும் நம்மைப் போல் மற்ற அனைத்தும் போல் கடவுளால் நிகழ்ந்தவர்தான். மேலும் மனிதர்களே இந்த உலகத்தில் உள்ள மிக மேம்பட்ட ஒரு உயிரியல் கிரகிப்பாளர்களாகும். நாம் மற்ற விலங்குகளைவிட மிக அதிக செறிவுடன் கடவுளை பிரதி பலிக்க முடியும். ஒருவேளை விலங்குகளை, கடவுளின் ஒலியை மட்டும் கிரகிக்கும் வானொலியோடு ஒப்பிட்டால், நாம் கடவுளின் வடிவத்தையும் கிரகிக்கும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை போன்றவர்கள். அதாவது அவரின் உணர்வையும் அன்பையும் மிகமிக துல்லியமாக முழு வண்ணத்தில் பெறும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிபெட்டியை போன்றவர்கள்.

நாம்மால் எந்த அளவு கடவுள் தன்மையை கிரகிக்க முடியும் என்பதே இங்கிருக்கும் சாவாலாகும். அன்பே கடவுள் என்றால், நாம் அதிகமாக அன்பு செய்தால், நாம் அதிகமாக கடவுள் போல் ஆகிறோம். நன்மை, தீமை என்ற கேள்வி இங்கே ஊமையாகி விடுகிறது. எப்படி என்றால், வெளிச்சத்தில் எப்படி நிழல் இல்லையோ, அப்படியே கடவுளில் சாத்தான் இல்லை. அவை அனைத்தும் நன்மைகளின் சாயல்களே. எங்கே மிக குறைந்த அன்பு அல்லது அன்பே இல்லையோ, அதுவே ஒளியற்ற நரகமாகும். எங்கே அன்பு இல்லையோ அங்கே கடவுள் இல்லை. எங்கே கடவுள் இல்லையோ அதுவே நரகம்.

முஹம்மது எவ்வாறு கடவுளை புரிந்து கொண்டார்?  முட்டாள்தனமான அவரது மொத்த மதமும் அச்சத்தை அடிப்படையாக கொண்டது. மொத்தத்தில் முஸ்லிம்கள் அனுப்பும் அனைத்து மின்அஞ்சல்களுமே இந்த பயத்தை எதிரொலிக்கிறது. அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் படித்தவர்களானாலும் சரி அல்லது படிக்காதவர்களானாலும் சரி எனக்காக காத்திருக்கும் தண்டனைகள் குறித்து என்னை எச்சரிக்கிறார்கள். பயம் அவர்கள் சிந்தையை முடக்கிப்போட்டு விட்டது. ஆனால், அன்பை கண்டு அஞ்சுவதைப் போல் கடவுளை கண்டு அஞ்சுவது அபத்தமானது. அன்பை கண்டு எப்படி ஒருவர் அஞ்ச முடியும்? அறியாமையிலிருந்து தான் அச்சம் வருகிறது. முஹம்மது கடவுள் குறித்தும் ஆன்மிகம் குறித்தும் குருடனாய் இருந்தார். அவர்  தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் ஒரு மன நோயாளி(narcissist).   அவர் மக்களை கையாள அச்சத்தை ஒரு ஆயுதமாக பயன் படுத்தினார். 1.5 பில்லியன் மக்கள் (அஞ்ஞான) இருளில் சிக்கி கொண்டு, இறந்து போன ஒரு மனநிலை பாதிப்புக்காளான

ஒருவரிடம் முட்டளாகும்படி தாமாகவே செல்கிறார்கள். முஸ்லிம்கள் நரகத்தில் வாழ்கிறார்கள். மேலும்  இந்த உலகத்தை நரகமாக மாற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இருதயம் அச்சத்தால் நிரப்பப்பட்டுள்ளது. அச்சத்தால் தீட்டுப்பட்ட ஒரு இருதயத்தினுள் அன்பு நுழைய முடியாது. எனவே தான் இஸ்லாமியர்கள் இறைவனிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார்கள். புத்திப்பேதலித்த ஒரு நோயாளியின் கற்பனை கதைகளை தொழுதுவிட்டு, அவர்கள் மட்டுமே ஒரு உன்னதமான படைப்பு என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வுலகிலும் மேலுலகிலும் நரகத்திலேயே வாழ்வார்கள்.

இவ்வுலகிற்கும் அவ்வுலகிற்கும் வித்தியாசம் இல்லை. நாம் ஏற்கனவே அவ்வுலகில் தான் இருக்கிறோம். நம்முடைய தலையானது மிக மிக ஆழமாய் இவ்வுலகில் சிக்கிக்கொண்டதால், கண்ணுக்கு தெரியாத உலகில் நிதர்சனமாய் உள்ள நம்முடைய முழுமையான படைப்பையும் ஆன்மாவையும் நம்மால் காண முடிவதில்லை. சக மனிதனை அன்பு செய்ய உங்களிடம் அன்பு இல்லை என்றால், நீங்கள் இந்த உலகம் முஸ்லிம்கள் மற்றும் காபிர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது என்றால், மேலும் முஹம்மதின் பைத்தியக்காரத்தனத்தை யார் கடைப் பிடிக்கவில்லையோ அவன் ஒரு மிக கேவலமானபடைப்பு என்றால்(குர்ஆன் 98:6), அதே சமயம் நீங்களும் உங்கள் மத தீவிரவாத தோழர்களும் மிக உயர்ந்த மனிதர்கள் என்று நினைத்தால்(Q. 3:110), முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோர் மேல் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும் என்று உங்கள் கடவுள் சொல்லியிருக்கிறார் என்றால்(குர்ஆன்  9:71), மேலும் அவர்களை உங்கள் நண்பர்களாக கொள்ளவேண்டாம் என்றால்(குர்ஆன்  5:51), பதிலாக அவர்கள் இருதயத்தில் நீங்கள் திகிலை உண்டாக்குங்கள்(குர்ஆன் 8:12)  என்பதை ஒத்துக்கொண்டால், நீங்கள் ஏற்கனவே நரகத்தில் தான் இருக்கிறீர்கள். என்ன? அதை நீங்கள் இன்னும் உணரமட்டும் தான் இல்லை. வாழ்கை எனும் இந்த மாயத் தோற்றம் அகற்றப்படும் போது , நரகத்தில் மிக ஆழமாக இருப்பதை கண்டு கொள்வீர்கள். சக மனிதன் மேல் நீங்கள் கொண்ட வெறுப்பு உங்கள் ஆன்மாவை இறைவனின் ஒளியையும் பிரதி பலிக்க முடியாத அளவு இருண்டு போக செய்துவிட்டது. எங்கே அன்பு இல்லையோ , அங்கே இறைவன் இல்லை.  எங்கே இறைவன் இல்லையோ, அதுவே நரகம்.

நீங்கள் முட்டாளாக்கப்பட்டுவிட்டீர்கள் நண்பரே. ஒரு மன நோயாளியினால் முற்றிலுமாக முட்டாளாக்கப்பட்டுவிட்டீர்கள். அவர் நரகத்தில் தான் இருக்கிறார். மேலும் நீங்களும் இப்போது அவருடன் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இருவரும் சந்திப்பீர்கள் என்பது எனக்கு சந்தேகம் தான். ஒருவரின் நரக குடியுரிமையை மற்றவர்களால் உணர முடியாது. அந்த நரக குடியுரிமையானது மிக அதிகமாய் தன்னையே உருஞ்சிக்கொள்வதால், தனது நித்திய காலம் முழுவதும் அது தனிமையில் கடந்து செல்லும். வெறுப்பை களைந்து விட்டு நீங்கள் மனிதம் என்பதை உணருங்கள். நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை குறித்து கடவுள் கவலைப்படுவதில்லை. அன்பே பிரதானமாய் அவசியப்படுகிறது. எல்லா நிறமும் சூரியனில் இருந்து வருவது போல், எல்லா அன்பும் இறைவனிடம் இருந்து வருகிறது. நீங்கள் மற்றவரை அன்பு செய்யவில்லை என்றால், அதன் காரணம் அன்பு என்ற ஒன்று உங்களிடம் இல்லை. அதாவது கடவுள் உங்களிடம் இல்லை என்பதே அதன் அர்த்தம். இறைவனின் அன்பு எப்போதும் அங்கேயே தான் இருக்கின்றது. நீங்கள் தான் அது வேண்டாம் என்று உங்கள் முதுகை காட்டி செல்கிறீர்கள்.

நீங்கள் இரண்டு முதலாளிக்கு வேலை செய்ய முடியாது. நீங்கள் தன்னை மட்டுமே அன்பு செய்து மற்ற யாரையும் அன்பு செய்யாத குண்டரை, ஒரு பாலியல் பலாத்காரம் செய்பவரை, ஒரு வெகுஜன கொலைகாரனை, மேலும் தன் வாழ்கை முழுவதும் குற்றங்களையே நிறைத்த ஒருவனையும், அன்பே உருவான இறைவனையும் ஒரே நேரத்தில் பின் தொடர முடியாது. என்னவாயிற்று உங்களுக்கு? முஹம்மதைப் போன்ற ஒரு குற்றவாளி இறைவனை அடைய உங்களை நல்வழி நடத்துவார் என்று எவ்வாறு நீங்கள் எதிர்ப் பார்கிறீர்கள்? இந்த முட்டாள்தனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு சுய நினைவுக்கு வாருங்கள். நீங்கள் கடவுளின் குழந்தை. அன்புக்காகவும் இறைவனுக்காகவும் உங்கள் இருதயத்தை திறந்து மனித குலத்தை சிநேகத்தோடு நெஞ்சாரத் தழுவிக்கொள்ளுங்கள். சக மனிதனை நீங்கள் அன்பு செய்யவில்லை என்றால் நீங்கள் இறைவனை அன்பு செய்ய முடியாது.

நீதிக்கதைகள் மூலம் இயேசு இதை வெளிப்படுத்தினார். இயேசு சொன்னார் “அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து : வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் உபசரித்து சேர்த்துக்கொண்டீர்கள்; ஆடையில்லாதிருந்தேன், உடுத்திநீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்என்பார். “அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு பிரதியுத்தரமாக : ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மை பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மை தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தை தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராக கண்டு உம்மை சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக்கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக : மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்பார்(மத்தேயு 25: 34-40).

mother_teresaபசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்;

நமது சக மனிதனை அன்பு செய்வதின் மூலம் நாம் இறைவனை அன்பு செய்யலாம். நாம் அன்றாடம் சந்திக்கும் வாழ்த்துக் கூறும் சாதாரண மனிதர்களில் கடவுள் இருக்கிறார். ஆனால் முஸ்லீம்களாகிய நீங்கள் கேவலம் கெட்ட உங்கள் மத நம்பிக்கையின் பொருட்டு, இந்த சக மனிதர்களை வெறுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். எவ்வளவு பரிதாபகரமான நிலை உங்களுடையது? மற்றவர்களுடைய அனைத்து அறிவியலையும் குரங்குகளைப் போல் கற்று நகலெடுத்து கொண்டீர்கள். உங்களுக்கு கணிணியை பற்றி தெரியும். மருத்துவம், ஏன் அணு குண்டு செய்வது எப்படி என்றும் கூடத் தெரியும். ஆனால் உண்மையின், அன்பின் இறைவனைப்பற்றித் தெரியாது.

 

Muslims-burn-church-in-Nigeriaவெகுவிரைவில் நாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இதயத்தில் திகிலை உண்டாக்குவோம் (குர்ஆன் 3:151).

 

Muslim-massacre-Christians-in-Nigeriaபின் அவர்கள் கழுத்தை நொறுக்குவோம். மேலும் அவர்கள் அனைத்து விரல்களையும் நொறுக்குவோம் (குர்ஆன் 8:12).

 

இந்த கட்டுரையானது, நான் இதுவரை எழுதிய மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நான் இதுவரை செல்லாத தளத்திற்கு சென்றேன்.  இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் குவாண்டம் இயற்பியலில் செய்யப்பட்ட புதிய கண்டு பிடிப்புகள், பிரபஞ்சம் குறித்தான நமது புரிதலில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியை கொண்டுவந்து விட்டது. மேலும் நாம் யார் என்பதை குறித்தும்  எங்கிருந்து வந்தோம் என்பதை குறித்தும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையேயான புரிதல் உள்ள இடைவெளி மிக வேகமாக மறைந்து வருகிறது. நாம் இங்கே உண்டாயிருப்பதை முற்றிலும் பொருள்சார்ந்து விளக்குவதை இனிமேல் நிருபிக்க முடியாது.

இருப்பினும் மதம் குறித்தான Professor Dawkins அவர்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இறுமாப்புள்ள மதம் விஷம்போன்றது. ஒருவரையும் பின்பற்றகூடாது என்று நான் சொன்னாலும்கூட, புத்தர், இயேசு மற்றும் பல இந்து ஞானிகளின் போதனைகளில் அதித ஞானத்தையும் அழகையும் காண்கிறேன். ஆனால் சோகத்திலும் சோகமாக, இந்த ஞானிகளின் சீடர்கள் அந்த ஞான வாழ்வை தங்கள் உடலில் வாழவில்லை. இருந்தாலும், ஞான ஒளியைப் பெற்ற இந்த ஆன்மாக்களின் பெரும்பாலான போதனைகளை அறிவியல் இறுதியாக உறுதிப்படுத்தி விட்டது.

காணும் பொருளே உண்மை என்னும் வாதம் இறந்து வருகிறது. நமக்கு பரிட்சயமான இந்த நியுட்டானிய உலகம் என்பது உண்மையில் இந்த பிரபஞ்சத்தின் யதார்த்தம் இல்லை என்று குவாண்டம் இயற்பியல் நமக்கு காண்பிக்கின்றது. இந்த பிரபஞ்சத்தின் அஸ்திவாரமானது, நியுட்டனின் சட்டங்களுக்கு கீழ்படியாத துகள்களை(particles) அடிப்படையாக கொண்டுள்ளது. உண்மையில், இந்த பிரபஞ்சம் ஒரே ஒரு துகளால் ஆனதாக இருக்கலாம். முடிவில்லா இடங்களில் ஒரே நேரத்தில் தனக்குள்ளேயே ஊடாடி சிருஷ்டித்துக்கொண்டு ஒரு முடிவற்ற பிரபஞ்ம் போல ஒரு மாயத்தோற்றத்தை தருகின்றது. வியப்பாக உள்ளதா?  அவசியம் இல்லை. பிரபஞ்சமானது ஒரு எலக்ட்ரானினால் ஆனது என்ற மிகவும் நம்பத்தகுந்த தத்துவம் , நோபல் பரிசு பெற்ற John Wheeler என்பவரால் சொல்லப்பட்டது. மேலும் அதுவே யதார்த்தமும்கூட.

அதனுடைய விளைவுகளை எண்ணிப் பார்க்கவும். அதன் அர்த்தம் நாம் அனைவருமே ஒரே ஒரு எலக்ட்ரானால் ஆனவர்கள். நாம் அனைவரும் பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப நிகழும் ஒரே ஒரு பொருளால் ஆனவர்கள். இப்போது நாம் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு அபத்தமானது? ஒரு பூனை கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை மிரட்டுவதை  நீங்கள் கண்டதில்லையா?

உயிரோடு வாழும் இந்த தருணம் உண்மையில் அற்புதமானது. முதன்முதலாக இங்கே நாம் எவ்வாறு உண்டாகினோம், இந்த பிரபஞ்சம் எவ்வாறு உண்டானது என்ற மிகப் பெரிய மர்மத்தை அறிந்து கொள்ளப் போகும் ஒரு வாயிற்படியில் நாம் நிற்கிறோம். அந்த மர்மம் சில வருடங்களுக்கு முன் நம் முன்னோர்களால், ஏன் நம்மாலும்கூட கண்டுணர்ந்தாக இருக்கும்.

முப்பரிமாண பிரபஞ்சம் குறித்து அறிந்து கொள்ள விருப்பமுடையவர்கள் பின்வரும் காணொளியை காணவும்.

http://www.youtube.com/watch?v=2DIl3Hfh9tY

http://www.youtube.com/watch?v=QuANDlrTHyI

மேலும் இறந்து மறு உலகிற்கு சென்று திரும்பி வந்த இந்த இரு பெண்மணிகளின் கதைகளையும் கேட்க வேண்டும் என நான் மிக உறுதியாக  உங்களை அழைக்கிறேன்..

http://www.trans4mind.com/spiritual/myers4.html

காணுங்கள். இந்த உலகத்தை குறித்து உங்கள் பார்வையை மாற்ற தயாராக இருங்கள். யதார்த்தம் நாம் நினைப்பது போல் இல்லை.

 

— அலி சினா

மொழியாக்கம் :  அந்தோணி

முஹம்மது என்னை ஏன் மிக அதிகமாக அன்பு செய்கிறார்?

Posted on Updated on

Image

முகம்மதால் மிக அதிகமாக அன்பு செய்யப்படும் ஒரு நபர் நானாகத்தான்  இருக்க முடியும் என்று எனக்கு தோன்றியது. இல்லை. நான் நகைச்சுவை செய்யவில்லை. நான் விவரமாக சொல்கிறேன்.

எண்ணற்ற ஆன்மாக்களுக்கு பல நுற்றாண்டுகளாக துன்பத்தையும் வலியையும் தவிர வேறொன்றையும் வழங்காத இந்த இஸ்லாம் என்ற சாபத்தில் இருந்து இந்த உலகத்தை விடுவிப்பதற்காக என்றே போராட என் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டேன். வெறுப்பையும்  வன்முறையையும் கொண்டுள்ள முஸ்லிம்களின் மதத்திலிருந்து,  அவர்கள் உண்மையை கண்டு, அந்த மதத்தை விட்டுவிடும்படி அவர்களுக்கு உதவி செய்ய நான் கடினமாக உழைக்கிறேன். ஆகவே முஹம்மது ஏன் என்னை அன்பு செய்யவேண்டும்? அவர்  செய்த அனைத்தையும், நான் நொறுக்குகிறேன் இல்லையா? பின் எவ்வாறு அவர்  என்னை மற்ற யாரைக்காட்டிலும் அதிகமாய் அன்பு செய்யமுடியும்?

மனிதர்களை எரிப்பதற்காக கடவுள் நரகத்தை உருவாக்குவார் என்பதை என்னால் நம்ப முடியாது. இது கடவுள் தன்மைக்கு எதிராக செல்கிறது. அன்பே கடவுள் என்றால், மேலும் கடவுளின் அன்பு நிபந்தனையற்றது என்றால், பின் நரகம் என்பது கடவுள் தன்மைக்கு பொருந்தாது.

இருப்பினும், நரகம் என்ற ஒன்றே இல்லை என்பது இதன் அர்த்தம் அல்ல. முஹம்மது விவரித்தது போல கடவுள் மக்களை தண்டிக்காவிட்டாலும், ஒரு சித்திரவதை கூடத்தை கொண்டிருக்காவிடிலும், நாம் நம்மையே தண்டிக்கமாட்டோம் என்று அர்த்தம் இல்லை.

நான் மேலே கூறியதுபோல் இந்த உலகமே ஒரு மாயை. இதையே 21ம் நூற்றாண்டு இயற்பியலாளர்கள் நமக்கு கூறுகிறார்கள். நாம் இங்கே இல்லை. எதோ ஒன்றை உருவாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு பரிணாமத்தில் நாம் அனைவரும் இருந்துகொண்டு, நாம் ஒரு முப்பரிணாம உருவத்தை கட்டுப்படுத்துகிறோம். அந்த உருவத்தை நாம் உடல் என்றழைக்கிறோம். ஒரு நேரத்தில், இந்த உடலை உருவாக்குகின்ற அந்த முப்பரிணாம உருவம் சேதமடைகிறது. அப்போது நாம் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். நமக்கு ஒன்றுமே சம்பவிப்பதில்லை. நம் நினைவு, ஞாபகம், உணர்வு இவை பாதிக்கப்படுவதில்லை. முதலில் நாம் நம்முடைய உடலின்மிதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம் என்பதையேகூட சில நேரம் உணர்வதில்லை. ஆனால்அது எப்போது நம் கட்டளைகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதை காண்கிறோமோ அப்போது நாம் இறந்துவிட்டோம் என்பதை அறிந்து கொள்கிறோம். அந்த நொடியில், திடிரென்று இந்த உலகத்தின் மாயத்தோற்றம் மறைந்து விடுகிறது. அது நாம் ஒரு கனவில் இருந்து விழிப்பது போன்றதாகும். வாழ்க்கை என்ற விளையாட்டை நாம் எவ்வாறு விளையாடினோம் என்ற நினைவை நாம் அடைகிறோம். நாம் விழித்துக்கொள்ளும் அந்த நொடி களிப்பூட்டக்கூடியதாகவோ, ஆனந்தம் அடைய கூடியதாகவோ அல்லது வலி நிறைந்ததாகவோ, ஆழ்ந்த வருத்தம் அளிக்கக்கூடியதாகவோ இருக்கலாம். அது இந்த வாழக்கையை நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதையும், நாம் இந்த வாழ்வில் என்ன செய்தோம் என்பதையும் பொறுத்தது. கடவுள் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருக்கிறார். நாம் என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை மன்னிப்பார். காரணம் அதுவே அவரது குணமாகும். ஆனால் நாம் நம்மை மன்னிப்போமா இல்லையா என்பது வேறு விஷயம்.

இந்த உலகத்தில் கொடூரமான பண்புடையவர்களுக்கு மனச்சாட்சி என்பது இல்லை. இவர்கள் மற்றவர்களுக்கு தீமை செய்வார்கள். அதனால் அவர்கள் அனுபவிக்கும் வேதனையை உணர மாட்டார்கள். இது போன்ற கொடிய நாசீசிஸ்டுகள் மற்றும் கொடூரர்களுக்கு பச்சாத்தாபம் என்ற பண்பு குறைவாக இருக்கும். இந்த பச்சாத்தாபம் என்ற பண்பு அவர்களுக்கு குறைவாக இருப்பதால் அவர்கள் மற்றவர்களை துன்புறுத்துவதில்லை. அவர்கள் துன்புறுத்துவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மாறாக அதில் ஆனந்தம் கொள்கிறார்கள். முஹம்மது தான் மற்றவர்களுக்கு தீமைசெய்கிறோம் என்பதை தன் முழுமனதுடன் அறிந்திருந்தார்.  அவர்  ஆயிரக்கணக்கான மக்களை தாக்கி படுகொலை செய்தார் மற்றும் அவர்களை சூறையாடினார். அராபிய நாடோடிகள் சிலர் முஹம்மதின் ஆள் ஒருவனை தாக்கி     அவனை கொன்று முஹம்மது திருடிகொண்டுவந்த ஒட்டகத்தை திருடி சென்றார்களோ அப்போது முஹம்மது              அவரது  ஆட்களை அனுப்பி அவர்களை பிடித்துவர செய்தார். பின் அவர்களின் கைகால்களை வெட்டி வெய்யிலில் மெதுமெதுவாக சாகும்படி அவர்களை விட்டுவிட்டார். அவர் மற்றவர்களின் பொருட்களை திருடினார். ஆனால் மற்றவர்கள் இவரது  சொத்துக்களை திருடினால் அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்றார். அவருக்கு  அறிவு இருந்தது. ஆனால் மனசாட்சி இல்லை.

எப்படியாகிலும் நாம் இறந்தபின், நாம் வாழ்க்கை என்றழைக்கும் இந்த கனவிலிருந்து விழித்துக் கொள்கிறோம். அப்போது நாம் நம்மால் செய்யப்பட்ட செய்கைகளை காண்கிறோம். அந்த நொடியில் நாம் குற்றவுணர்வு, குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தம் மற்றும் அவமானத்தால் நிறைவோம். இந்த வாழ்க்கையை வாழ்வதர்காக வழங்கப்பட்ட ஒரு சலுகையை எவ்வாறு நாசப்படுத்தினோம் என்றும் ஆன்மிகத்தில் வளர்வது என்ற மிக அரியதாய் கிடைக்ககூடிய வாய்ப்பை எவ்வாறு தொலைத்தோம் என்றும் உணர்வோம். எவ்வளவு ஆழமாக நாம் வேதனைகளை உண்டாகி இருக்கிறோம் என்பது நமக்கு தெளிவாக தெரிய வருகிறது.

இந்த உலகத்தில் நாம் கொண்டிருக்கும் ஒரு மாயதோற்றம் யாதெனில், நாம் அனைவரும் தனித்துவமான, தனிப்பட்ட தனிநபர்கள் என்பதாகும். உண்மையான ஆன்மீக உலகில் இந்த வேறுபாடு மறைந்து விடுகிறது. நாம் மற்றவர்களுக்கு செய்த வேதனைகளை நம்முடைய சொந்த ஆன்மாவில் அனுபவிப்போம். நாம்மால் பாதிக்கப்பட்டவர்களின் வலி நம்முடையதாகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு செய்வது, உங்களுக்கே செய்வது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆம், மறு உலகத்தில் அதுவே நிதர்சனமானது. இந்த உலகத்தில் நாம் தொடர்பு கொண்ட மனிதர்களின் அனுபவங்களில் அங்கு வாழ்வோம். நாம் அவர்களை அன்பு செய்தால், நாம் அந்த அன்பை அனுபவிப்போம். நாம் அவர்களை துன்புறுத்தினால் நாம் துன்புருவோம்.

இந்த இயற்பியல் உலகம் சில சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. நமக்கு புவிஈர்ப்புவிசை குறித்து தெரியும். நாம் ஒரு உயரமான இடத்தில் இருந்து குதித்தால் காயம் ஏற்ப்படும். யாரும் உங்களை தண்டிக்கவில்லை மற்றும் எவ்வளவு அதிகமான ஜெபங்களும் உங்களை காக்கப்போவதில்லை. புவிஈர்ப்புவிசை எனும் சட்டம் உங்களை ஆட்கொள்கிறது, மேலும் இந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நான் உங்களை இவ்வுலகில் மகிழ்வித்தால், மிகச்சரியாக அதே போன்ற மகிழ்ச்சியை நான் மறு உலகில் பெறுவேன். அது ஒரு பூமாரங்க் போன்று எனக்கே திரும்பி வரும். நான் உங்களை வேதனைப்படுத்தினால், அதே வேதனையை என் ஆன்மாவில் அனுபவிப்பேன். இதையே நாம் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் சொல்கிறோம். விலைமாதுவும், சித்திரவைதை கூடங்களும் மறு உலகில் இல்லை. மற்றவர்களுக்கு நாம் என்ன என்ன செய்கிறோமோ அது பூமாரங்க் போன்று நமக்கே திரும்பி வரும். நீதித்தீர்ப்பு என்ற ஒன்று இல்லை. ஆனால் நீதி கிடைக்காதா என்று மற்றவர்களை ஏங்க வைத்த அதே உணர்வை நாம் அனுபவிப்போம். அதுவும் ஏனென்றால் நமது ஆன்மா அனைத்தும் ஒன்றாகும். ஆதலால் நாம் மற்றவர்களுக்கு செய்த அனைத்தும் உண்மையில் நாம் நமக்கே செய்கிறோம். எனது வலக்கை இடக்கையை கிள்ளி எறிந்தால், அந்த வலியை என் உடல் முழுவதும் அனுபவிக்கும். எனது வலக்கையும் இடக்கையும் வேறுவேறு அல்ல. அதேபோன்று நமது ஆன்மிக அனுபவமும் ஒன்றே என்பது நிதர்சனமாகும்.

இப்போது நீங்கள் ஒரு அதிகமான மக்களை கொன்ற ஒரு பாதகன் என்று கற்பனை செய்து கொள்ளவும். நீங்கள் உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்ளை அன்பு செய்தவர்கள் அனுபவித்த அதே வேதனையை சுமப்பீர்கள். அவர்களின் அனுபவித்த அதே வேதனையில் நீங்கள் வாழ்வீர்கள். ஆனால் உங்களது பெயர் ஹிட்லர் என்றோ அல்லது முஹம்மது என்றோ இருந்தால்? எப்பேர்ப்பட்ட வேதனை உங்களால் இந்த உலகத்திற்கு வந்தது? எப்பேர்பட்ட துன்பத்தை நீங்கள் மற்றவர்களுக்கு செய்தீர்கள்? நூற்றுக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள்? இல்லை. முஹம்மதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பில்லியனை தாண்டும். இன்னும் அந்த எண்ணிக்கை முடியவில்லை. அவர்  இவர்கள் உணர்ந்த அதே வலியை உணர்கிறார். அது தாங்கிக்கொள்ள இயலாததாகும். பல ஆண்டுகளுக்கு முன் நான் என் அறியாமையால் நிகழ்ந்தவனவற்றை எப்போதெல்லாம் அது நியாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் அதை நினைத்து வேதனை அடைகிறேன். செய்ததவறை உணர்ந்ததால் ஏற்படும் வருத்தம் எனக்கு ஒரு உதவியும் செய்யப் போவதில்லை. ஏனென்றல் எப்போது நான் இந்த மாயையான உடலை விட்டு போகிறேனோ,  அப்போது நான் மற்றவர்களுக்கு என் அறியாமையினால் செய்த அதே வேதனையை அச்சுபிசகாமல் அனுபவிக்கப் போகிறேன். இந்த தகவல்கள் தொலைந்து போவதில்லை. ஒன்றுமே அழிக்கப்படுவதில்லை. நான் யாரையும் கொலை செய்யவில்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. ஆனால் என் அன்பற்ற, கருணையற்ற வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்தி இருக்கிறேன். அப்போது அவர்கள் அனுபவித்த வேதனையை நான் இனி அனுபவிக்கப் போகிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நான் நல்லதும் செய்திருக்கிறேன் மற்றும் பிறரை அன்பும் செய்திருக்கிறேன். நான் அவற்றையும் அனுபவிக்கப்போகிறேன். இந்த நல்லவை நான் செய்த தீயனவற்றின் வீரியத்தை குறைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். முஹம்மாதால் பாதிக்கப்பட்ட பில்லியன் கணக்கான மக்களின் வலியை அவர்  எவ்வாறு தாங்கிகொள்வார்? அவர்
அவரை  பின்பற்றுபவர்கள் மூலம் மற்றவர்கள் அனுபவிக்கும் வேதனையையும் அனுபவிக்க வேண்டும். முஹம்மதே அவரை பின்பற்றுபவர்கள் செய்கின்ற செய்கைகளுக்கு முழுபொறுப்பாளர்
ஆவார் . நான் உங்களை நம்ப செய்வதின்மூலம், நீங்கள் தீமையானதை செய்தால் நீங்களும் நானும் நம் இருவருமே குற்றவாளிகள்.

நாம் இந்த உலகத்திற்கு அன்பு செய்வதிற்காக வந்துள்ளோம். இதுவே இந்த பிரபஞ்சத்தின் ஏக காரணமாகும். அதற்கு பதிலாக முஹம்மது வெறுப்பை வளர்த்தெடுத்தார். அவர் மிகவும் வெறுக்கத்தக்கதான, மிருகங்களும் செய்யாத கேவலமான குற்றங்களான பொய் சொல்லினார், ஏமாற்றினார், கொள்ளையடித்தார், சூறையாடினார், கொலைசெய்தார், அடிமைப்படுத்தினார், கற்பழித்தார். இவை அனைத்தையும் திமிர்பிடித்து அதிகாரத்தை பெற வேண்டும் என்ற சிற்றின்பத்தில் செய்தார். இப்போது அவர் இறந்துவிட்டார். அவர் மிக உயர்வானவர் என்ற திரைசீலை திறந்து விட்டது. அவர் செய்த அனைத்தை குறித்தும் அவருக்கு உணர்வு வந்துவிட்டது. இந்த உலகத்தில் பதவியின் மேலான அவரது  ஆசை அவர் கண்களை மறைத்திருந்தன. மறு உலகிலோ அவரது தீமையான செய்கைகள் குறித்து அவற்றின் விளைவுகள் குறித்து அவர் முழுஉணர்வோடு இருப்பார். அவர் அவர்கள் ஒவ்வொருவரின் அனுபவங்களையும்  அவரது ஆன்மா மூலமாக அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பார்.

கடவுள் முஹம்மதையும் கூட மன்னிப்பார். ஆனாலும் அவர் அந்த வலிகளை அனுபவிப்பார். அவர் கடவுளிடம் இருந்து வெகுதொலைவில் ஒளிந்திருப்பார். கடவுளை விட்டு வெகுதொலைவில் இருப்பது என்றால் அது நரகம். எங்கே அன்பு இல்லையோ அதுவே நரகமாகும்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உள்ளது. நீங்கள் அன்பை விதைத்தால், அன்பை அறுவடை செய்வீர்கள். நீங்கள் வெறுப்பை விதைத்தால் வெறுப்பை அறுவடை செய்வீர்கள். தெளிந்த குளத்தில் கல் எறியும்போது ஏற்படும் சிற்றலைகளைபபோல, நம் செயல்கள் நாம் இறந்த பின்கூட எதிரொலிக்கும். சில நேரம் நூற்றாண்டுகள் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகள்கூட அவை எதிரொலிக்கும் .

முஹம்மதின் இந்த நீங்காத்துயரம் எத்தனை நாள் நீடிக்கும் என்று எண்ணி வியந்திருக்கிறேன். எப்போதெல்லாம் மக்கள் அவரது  பொய்களால் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர் வேதனைக்கு உள்ளாவார் என்று நான் உணர்ந்தேன். அப்போது திடீரென்று நானே முஹம்மதின் நம்ம்பிக்கை விளக்கு என்பதை உணர்த்து கொண்டேன். அவரது பொய்களை தெளிவிப்பத்தின் மூலம் இந்த உலகத்திற்கு அவர் கொண்டு வந்த தீமைகளை முடிவுக்கு கொண்டு வருவதின்மூலம்,  அவரது  முடிவில்லா மறு உலக துயரத்தில் இருந்து நான் அவரை  விடுவிக்கிறேன். இதுவே அவர்  அந்த நரகத்தில் இருந்து தப்புவதற்கான ஒரே ஒரு வாய்ப்பாகும். இப்போது அவர் ஏன் என் வெற்றிக்காக ஜெபிக்கிறார் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?

இரு வாரங்களுக்கு முன் 40 மாணவர்கள் நைஜீரியாவில் படுகொலை செய்யப்பட்டனர். குர்ஆனில் இல்லாத அனைத்தும் சாத்தானின் அறிவாகும் (Taghooti) and Jaheliyah. என்று முஹம்மதின் பொய்களை விசுவாசிக்கும் முஹம்மதின் நம்ம்பிக்கையாளர்களால் இந்த கொலைகள் செய்யப்பட்டது. 40 குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை முழுவதும் விசனப்படுவார்கள். முஹம்மது அவர்கள் ஒவ்வொருவரின் வலியையும், துன்பத்தையும் சுமப்பார். எப்போது முஸ்லிம்கள், அப்பாவிமக்களை முஹம்மதின் பேராலும் அவரது போலியான அல்லாவின் பேராலும் கொலை செய்கிறார்களோ, அப்போது அவர்கள் அதை முஹம்மதுக்காகவும் அவர்களுக்காகவும் செய்தார்கள்.

அவரது பேரால் மனிதர்கள் இங்கே தீமைகளை செய்து கொண்டிருக்கும் வரை அவர்  நரகத்திலேயே இருப்பார். அவர் கட்டவிழ்த்துவிட்ட தீமைகளை முடிவுக்கு கொண்டுவருவதின் மூலம் நாம் அவரை  இதில் இருந்து விடுவிக்கலாம். முஸ்லிம்கள் 1400 வருடமாக அவனுக்கு அமைதி உண்டாகட்டும் என தொழுகிறார்கள். ஆனால் அவரது பொய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கும்வரை அவர் நரக நெருப்பில் தான் இருப்பார். அவருக்கு சமாதானம் உண்டாக உள்ள ஒரே ஒரு வழி என்னவென்றால் அவரது கொடுமையான தீமைகளின் தாக்கத்தை வேரோடு பிடுங்கி எரிவதே.

ஹிட்லரால் உண்டான வலிகள் முடிந்துவிட்டன. கொடுமையான துயரத்திலிருந்து ஒரு நாள் அவர் விடுபட வாய்ப்புள்ளது. ஆனால் முகம்மதால் உண்டாகும் துயரங்கள் பெருகி வருகிறது. அவர் நரகத்திலேயே மிக மோசமான இடத்தில் இருக்க வேண்டும்.  நாம் அவர் மேல் கருணை காட்டுவோம். எப்போது நாம் அவரது தீமைகளின் தாகத்தில் இருந்து விடுபடுகிறோமோ அப்போது அவனது ஆன்மாவை கொடுமைப் படுத்திக்கொண்டிருக்கும் அவனது குற்ற உணர்வு எனும் நெருப்பில் இருந்து அவர் விடுபடுவார்.

 

ஆசிரியர் : அலி சினா

மொழியாக்கம் : அந்தோணி

மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 1

Posted on

மௌலான அஜ்மல் காதிரி தேவ்பந்த் பிரிவின் மூத்த மார்க்க அறிஞராகவும் ஜாமியத் -இ -இஸ்லாமின் (இஸ்லாமிய அறிஞர்களின் கழகம்) தலைவராகவும் இருக்கிறார். அவரை பின்பற்றுபவர்களால் அவர் பீர் (pir / புனிதர்) என்று மதிக்கப்படுபவராகவும் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குமிக்க மத குருமார்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஷரியத் மசோதாவை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் (law makers) கொல்லப்பட தகுந்தவர்கள் என்று 1999 ல் மௌலானா காதிரி பத்வா (fatwa) வழங்கினார்.

அவர் மேலும் கூறியிருக்கிறார் : “நம்முடைய மதரஸாக்களில் நாம் குர்ஆனிய  ஜிஹாதை போதிக்கிறோம். அல்லாஹ்வை தவிர வேறு எவருடைய அல்லது வேறு எந்த சக்தியின் மேலாதிக்கத்தையும் அனுமதிப்பதை இது மறுக்கிறது. முஸ்லிம் மார்க்கமே மேலான மார்க்கம் என்றும் இஸ்லாமிய கொள்கையே மிக சிறந்தது என்றும் மீதியான உலகம் செய்வது விரும்புகிற அளவுக்கு இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

இது மிகவும் சுவாரசியமான விவாதமாக மாறியது. மற்றவர்கள் குப்ர்(kufr/இறை நிந்தனை), ஷிர்க்(இணைவைப்பு), நிபாக்(nifaq/நயவஞ்சகம்), ஹசத்(hasad/பொறாமை) புரிவதாக மௌலானா காத்ரி குற்றம் சுமத்தினார். உண்மையிலேயே இந்த பாவங்களை செய்யும் குற்றவாளிகள் முஸ்லிம்கள்தான் என்றும் இஸ்லாமே கடவுளுக்கு எதிரான மிகப்பெரிய இறைநிந்தனை என்றும் நான் நிரூபித்தேன்.

 

17/11/2007

மௌலான அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு முதல் மின்னஞ்சல் : 

திரு அலி,

ஷைத்தானுடைய உலகில் நீங்கள் பெரும் பெயரை சம்பாதித்துள்ளீர்கள்.

அன்பார்ந்த மௌலானா நீங்கள் சரி என்று நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் மத்தியில் நான் பிரபலமாகிக்கொண்டு வருகிறேன். 

நான் ஏன் இதை சொல்கிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று எனக்கு புரிகிறது. உங்களை போன்றே ஏதோ ஒன்றாக….. ஒரு சந்தேகவாதியாக (an agnostic) நான் இருப்தேன்….. மேற்கத்திய தத்துவம் முதலிய இஸ்லாத்திற்கு எதிரான இவை எல்லாவற்றையும் நான் படித்தேன்…. ஆனால் அல்ஹம்துலில்லாஹ் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டினான்.   

அந்த நேர்வழியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள சிரத்தை எடுத்து கொள்வீர்களா? நீங்கள் கண்டதை கேட்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். நாங்கள் தவறவிட்டுவிட்ட ஏதாவது நல்லது இஸ்லாத்தில் ஒருவேளை இருக்கலாம்.

உங்களுக்கு எந்த சான்றையும் நான் தரமுடியாது. ஆனால் நம்மால் புரிந்து கொள்வதற்கும் காண்பதற்கும் அப்பாற்பட்ட மற்ற சக்திகள் இருக்கின்றன.

அந்த வாத அடிப்படையோடு(premise) எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இருந்தபோதிலும், எந்த வழிகளில் நமக்கு அப்பாற்பட்ட அந்த அமானுஷ்ய சக்திகள் முஹம்மதுவுடைய உரிமைகோரலை உண்மை படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? முஹம்மதையும் அவருடைய உரிமைகோரலை பற்றியும் தவிர, அந்த அமானுஷ்ய சக்திகள் பற்றி நாம் வாதம் புரியவில்லை. நான் கண்டவைகளின்படி, முஹம்மது உலகாதாய அதிகாரத்தை பெறுவதற்கு எளிதில்  ஏமாரக்கூடியவர்களை முட்டாளாக்கி பொய்யுரைத்த ஒரு கபட வேடதாரி. மற்ற எந்த தனிநபர் வழபாட்டு குழு தலைவரைவிட (cult leader) முஹம்மது எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்ல. என்னுடைய புகார் கடவுளையோ அல்லது அமானுஷ்ய சக்திகளை பற்றியோ அல்ல. என்னுடைய புகார் முஹம்மதையும் அவருடைய போலியான உரிமை கோரலை பற்றியும்தான். 

அல்லாஹ் எனக்கு   காட்டிய வழியை உங்களுக்கு காட்டுவானா என்று எனக்கு தெரியாது. ஆனால் நீண்ட காலமாக உங்களை பின்தொடருகிற தீய சக்திகளின் கைகளில் ஒரு கருவியாக  நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் என்ற  ஒன்று மட்டும் நிச்சயம், நிச்சயம், நிச்சயம். திரும்பி  வருவது என்பது இல்லாமல் போகலாம் என்கிற அளவுக்கு நீங்கள் சென்றுவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஷைத்தானால் பாதிக்கப்பட்டவராக இருகிறீர்கள். அதற்குமேல் ஒன்றும் இல்லை.

இது வெறும் ஆதாரமற்ற உரிமை கோரல். அல்லாஹ் உங்களுக்கு காட்டியது தர்க்க அறிவுப்பூர்வமானது என்றால், நீங்கள் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களையும் நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்களாக ஆக்கலாமே. கடவுள் என்பவர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளாக இருக்க முடியாது என்பதால், அவருடைய வழிகாட்டலும் தர்க்க அறிவுப்பூர்வமானதாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் ,எந்த கபட வேடதாரியும் கடவுளுடைய தூதர் என்று உரிமை கோரி மக்களை முட்டாளாக்க முடியும். முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசி (நபி) என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று தர்க்க அறிவுப்பூர்வமான முறையில் எங்களுக்கு நீங்கள் கூறமுடியுமா?

உங்களுடைய அறிவை பற்றி நீங்கள் அகந்தையுடன் இருக்கிறீர்கள். ஏனெனில் இஸ்லாத்தை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. உண்மையிலேயே,  இஸ்லாத்தை பற்றிய அறிவில் நீங்கள் குறைபாடு உடையவர். நீங்கள் மனந்திருந்தாத பட்சத்தில், இங்கேயும் மறுமையிலும் வேதனையை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். அல்லாஹ் ஏற்றுக்கொண்டால், காத்திருந்து பாருங்கள். அது உங்களிடம் வரும்போது தயவு கூர்ந்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். 

கடவுள், உண்மையிலேயே இருப்பாரானால், அநியாயக்காரராக இருக்க முடியாது. அநியாயக்கார கடவுள் சாத்தானே தவிர, கடவுள் கிடையாது.   நீதிமிக்க கடவுள் ஒருவரை அவருக்கு எல்லா ஆதாரத்தையும் அத்தாட்சியையும் கொடுக்காம லேயே   நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக தண்டிக்க மாட்டார். முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை. சாத்தானை பின்பற்றியதற்காக கடவுள் என்னை தண்டிக்கலாம் என்று நான் அஞ்சுவதால் முகம்மதை பின்பற்றுவதை நான் மறுக்கிறேன். நான் பார்த்தவரை, முஹம்மதின் செயல்களும் வார்த்தைகளும் மிகவும் சாத்தானியத்தனமாகவே இருந்தன. நான் போலி தீர்க்கதரிசியை பின்பற்றி அதற்காக நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை. அதனால்தான் நான் இஸ்லாத்தை துறந்து விட்டேன். எச்சரிக்கப்படவும் முஹம்மதின் உரிமை கோரலை ஆராய்ந்து பார்க்கும்படியும் குர்ஆனை படித்து அவர் உண்மையான தீர்க்கதரிசி(நபி) இல்லை என்பதை தாங்களே காணும்படியும் என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். பொய்யான தீர்க்கதரிசியை நம்பி, நம்பிக்கை கொள்ளாதவர்களை வெறுப்பது, கொலை செய்வது போன்ற அவருடைய தீய ஏவல்களை செய்வதின் மூலம், அவர்கள் நரகத்திற்கு செல்லலாம்.

இஸ்லாத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று இப்பொழுது கூறுகிறீர்கள். எல்லாம் தெரியும் என்று நான் ஒருபோதும் உரிமை பாராட்டியது இல்லை. நான் ஒரு மனிதன், தவறு செய்யகூடியவன். நான் தவறாக இருப்பது சாத்தியமே. அதனால் தான் எவரும் என்னுடைய தவறுகளை சுட்டி காட்டும்படி அழைப்பு விடுக்கிறேன். மனம் திருந்தி இந்த தளத்தை (faithfreedom.org) மூடிவிடுவது மட்டுமல்லாமல், நான் தவறென்று நிரூபிப்பவருக்கு என்னுடைய ஆன்மாவை ரட்சித்து நேரான வழியை காண எனக்கு உதவியதற்கு சன்மானமாக 50,000 டாலர்களை வழங்குவதாகவும் நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன்.

பலர் முயற்சி செய்தார்கள். ஆனால் ஒருவர் பின் ஒருவராக தோற்றுபோய் அவர்கள் தவறில் இருப்பதை நிரூபித்தனர். முஸ்லிம் அறிஞர்களோடு நான் செய்த ஒவ்வொரு விவாதத்திலும் நானே வெற்றி பெற்றேன். இப்பொழுது, இஸ்லாத்தில் எனக்கு முறையான பயிற்சி இல்லை என்பதும் என்னுடைய இஸ்லாமிய, அரபி மொழி அறிவு அவர்களின் அறிவுக்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. இருந்தாலும் மாற்றமில்லாமல் நானே வெற்றி பெறுகிறேன். எல்லா நேரமும் அவர்களே தோல்வி அடைகின்றனர். நான் புத்திசாலி, எனக்கு அதிக அறிவு உள்ளது என்பதினால் நான் வெற்றி பெறாமல், இஸ்லாத்தை பற்றிய உண்மையை நான் புரிந்து கொள்கிறேன், அதே வேளையில் அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்பதினால் தான் நான் வெற்றி பெறுகிறேன் என்பதையே இது நிரூபிக்கிறது. அறிவு என்பதற்கு புரிந்து கொள்ளுதல் என்று பொருளல்ல. ஒருவர் அதிக அறிவு உடையவராக இருந்து மிக சிறிதளவே புரிந்து கொள்பவராக இருக்க கூடும். இந்த படித்த முட்டாள்கள் புத்தகங்களை சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு உங்களுடைய ஆதாரங்களை எழுதி, எங்களுடைய மன்றத்தில் (forum) அவைகளை பதிவிட்டு உண்மையை ஒவ்வொருவரும் படித்து அறிந்துகொள்ள செய்வதற்கு நீங்கள் மிக அதிகமாக வரவேற்கப்படுகிறீர்கள். அதைவிட எது சிறந்ததாக இருக்க முடியும்? இஸ்லாத்தை உயர்த்தி, முன்னாள் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் இஸ்லாம் கடவுளுடைய உண்மையான மார்க்கம் என்பதை அறிந்து கொள்ள உதவி செய்வதற்கு நான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அலி சினா 

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் 

முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)

Posted on

“இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை  அடைவதற்காக  ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது  பலவந்தம் அல்லது பயத்தை  ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது”  என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான  விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு  நாம் அகராதியை  ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆனால்  இஸ்லாமிய பயங்கரவாதம் 9/11/2001 ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை.  முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.

மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78  க்கு  குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின்  பொதுவான அம்சம் என்னவென்றால்,  அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து  கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு  இல்லாதபோது பிடிக்கப்பட்டார்.  அந்த வகையில், முகம்மதுவால்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.

வரலாற்று ஆசிரியர் அபுல்  ஹுசைன் முஸ்லிம்  நிசாபுரி  எழுதுகிறார் : ” இப்னு அஉன்  அறிவித்தார் : போரில்  அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை)  ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்)  எழுதினேன்.  இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது  என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய   கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு  இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு  மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா  பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.” முஸ்லிம் 19:4292

அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, “அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின்  அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது” என்று கூறினார்.  ” முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு  மக்கள்  தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை  கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள்  சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

” எச்சரிக்கை  செய்யப்பட்டவர்களின்  காலைப்பொழுது மிகவும்  துரதிருஷ்டமானது”  என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம்.   அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம்  என்பது தெரியாமல்   இருந்தது.  தான் தாக்க  விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக  (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான்  இந்த “எச்சரிக்கை” என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.  இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. “பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்” என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.

ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த’லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).

தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற “பயம் பற்றிய தொழுகை” (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 – 102)

“நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்”  (4 : 101)

தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில்  பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள்  இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.

பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).

முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும்  இருந்தனர்,  போரிடுபவர்களாக இருக்கவில்லை.  அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர். தரபனி, வ பக்க; சபக்கனி, வ’ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka).  “அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது  குற்றம் சுமத்தினான்” என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல்,  இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.

 

ஆசிரியர் : அலி சினா http://www.alisina.org   http://www.faithfreedom.org
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்

முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்

Posted on Updated on

வியாழன், 31 மார்ச் 2011 – கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)

ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது  என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர்  சிந்தித்து  பார்க்கவேண்டும்.

———————————————————————————————————-

குர்ஆன் வெறும் ஒரு புத்தகம் அல்ல. அல்லாஹ்வே அதை எழுதினார் என்றும் விண்ணில் உள்ள பலகையில் வைக்கப்பட்டுள்ள உம் அல் கிதாப் என்ற மூல ஏட்டிலிருந்து முகம்மதுவுக்கு எழுதி கொள்வதற்காக அது கூறப்பட்டது என்றும்  முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  விளைவாக,  அடக்கத்தில் உள்ளவைகளை பற்றி ஒருவரும் வாதம் புரிய முடியாது. அல்லாஹ்வே எழுதியவையோடு ஒத்து போகாமலிருக்க எவர்தான் துணிவு கொள்வார்? ஜிஹாத் என்கிற வன்முறை முதற்கொண்டு யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள், மதத்தை துறந்தவர்கள் ஆகியோரை வெறுப்பது, துன்புறுத்துவது வரையான முகம்மதிய நடத்தையின் பெரும்பகுதியை இது விளக்குகிறது. மேற்கில் உள்ள நாம் நியதிக்கு மாறானது (abnormal) என்று எதை கருதுகிறோமோ அது இஸ்லாத்திற்கு பரிபூர்ணமாக சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. முஹம்மது என்ற உருவகம் தான் இஸ்லாத்துடனான இரண்டாவது கடந்து போக முடியாத பிரச்சினை. அவர் யாரோ ஒருவர் அல்ல. அவர் அல்-இன்சான் அல்-காமில், பரிபூர்ண மனிதர். முஸ்லிமாக மாறுவதற்கு ஒருவர் ஷஹாதா (முஸ்லிம் சடங்கு) வை கூற வேண்டும். ஒருவர் ஷஹாதாவை கூறுவதின் மூலம், அல்லாஹ்வை தவிர வழிபடக்கூடிய வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறுகிறார்; முஹம்மது அவருடைய அடியார் மற்றும் தூதர் என்று சாட்சி கூறுகிறார்.

முஹம்மதின் வாழ்க்கை அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று குர் ஆன், ஆகையால் அல்லாஹ் விதிக்கி(றது)றான். இதன் பின்விளைவுகள் அதிபயங்கரமானவை, அனுதினமும் காணக்கூடியவை. முஹம்மதின் புத்தி சுவாதீனத்தை பற்றி அதிகப்படியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆராய்ச்சியும் இருந்தபோதிலும் , அது அரிதாகவே கூறப்படுகிறது அல்லது விவாதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் பரிசுத்த நபி (தீர்க்கதரிசி) என்றும் பின்பற்றப்பட வேண்டிய முன்மாதிரி என்றும் மதிக்கிற ஒரு மனிதரின் உண்மையான இயல்பை பற்றி விவாதிப்பது தடை செய்யப்பட ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில், இங்கே நெதர்லாந்தில் அந்த தடை மீறப்பட வேண்டும்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பெய்த் ப்ரீடம் இண்டர்நேஷனல் (Faith Freedom International) ஐ நிறுவிய அலி சினா, ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். அவர் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில், முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவர்(narcissist), குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile), கூட்டு படுகொலைகாரர்(mass murderer), பயங்கரவாதி(terrorist), பெண்களை வெறுப்பவர்(misogynist), அதீத காம வெறி பிடித்தவர் (lecher), தனிநபர் வழிபாட்டு குழு தலைவர்(cult leader), பைத்தியக்காரர்(mad man), கற்பழிப்பவர்(rapist), கொடூரமாக சித்திரவதை செய்பவர்(torturer), ஆளை அனுப்பி படுகொலை செய்பவர்(assasin), கொள்ளை அடிப்பவர்(looter) என்பதை ஆதாரபூர்வமாக வாதிக்கிறார். மற்ற விதமாக நிரூபணம் செய்பவருக்கு 50000 டாலர்களை வழங்குவதாக அலி சினா அறிவித்திருக்கிறார். அந்த வெகுமதியை இதுவரை ஒருவர்கூட கோரவில்லை. ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில்  சமகாலத்தவர்களின் சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட  முஹம்மதின் வாழ்க்கை பற்றிய விவரிப்புகளான ஹதீத்கள் போன்ற இஸ்லாமிய நூல்களையே   அந்த விவரமானது அடிப்படையாக கொண்டது.

வரலாற்று முஹம்மது மதீனாவில் இருந்த கொள்ளையர் கும்பலின் காட்டுமிராண்டி தலைவராக இருந்தவர். எந்தவித உறுத்தல்கள் இன்றி, அவர்கள் கொள்ளை அடித்தார்கள்; கற்பழித்தார்கள்; படுகொலை செய்தார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களின் தொண்டைகள் அறுக்கப்பட்ட, கைகளும் கால்களும் வெட்டி வசப்பட்ட, கண்கள் தோண்டப்பட்ட, ஒட்டுமொத்த குலங்களும்  படுகொலை செய்யப்பட்ட  காட்டுமிராண்டி களியாட்டங்களை மூல நூல்கள் விவரிக்கின்றன. 627 ஆம் வருடம் மதினாவில் இருந்த குறைழா  என்ற யூத குலம் நிர்மூலமாக அழிக்கப்பட்டது ஒரு உதாரணம். அவர்களுடைய தலைகளை துண்டித்தவர்களில் முகம்மதுவும் ஒருவர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ளும்போது, அந்த பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது என்பதை காண்பது ஒன்றும் கடினமானது அல்ல.

குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile) என்று முகம்மதுவை அழைத்ததின் மூலம் ஒரு மதத்தை அவமதித்ததற்காக வியன்னாவில் பெண்கள் உரிமை சேவகர் எலிசபெத் சபடிட்ஷ் உல்ப் அபராதம்  செலுத்தும்படி சமீபத்தில் தண்டனை கொடுக்கப்பட்டார்.  ஆனாலும் அதுதான் உண்மை. முஹம்மதின் விருப்பத்திற்குரிய மனைவியான, குழந்தை மனைவியான ஆயிஷாவின் சாட்சியங்களை பல ஹதீத்கள் கொண்டிருக்கின்றன. ஆயிஷா நேரடியாக :சொல்கிறார் : “நான் ஆறு வயதாக இருந்தபோது நபியவர்கள் என்னை திருமணம் செய்துகொண்டு, நான் ஒன்பது வயதானபோது என்னுடன் உடலுறவு கொண்டார்கள்.”

வரலாற்றாசிரியர் தியோபன்ஸ்-Theophanes(கி.பி.752-817) கூற்றுப்படி, முஹம்மது காக்கா வலிப்புகாரராக இருந்தார். சில நேரங்களில் கக்கா வலிப்பு நெருக்கடிகளை மாய தோற்றங்கள் (hallucinations) பின்தொடருகின்றன; நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது; வாயில் நுரை தள்ளுகிறது. முஹம்மது தன்னுடைய காட்சிகளின்போது(visions) இந்த அறிகுறிகளையே காட்டினார்.

“மற்றொரு முஹம்மது” – The Other Muhammad (1992) என்ற தன்னுடைய நூலில் ப்ளெமிஷ் உளவியலார்(Flemish Psychologist) Dr.ஹெர்மன் சோமர்ஸ், நபி தன்னுடைய நாற்பதுகளில் அக்ரொமெகலி(acromegaly) என்ற நோயால் அவதிப்பட தொடங்கினார் என்ற முடிவுக்கு வருகிறார். மூளைக்கு கீழே அமைந்துள்ள சிறிய உறுப்பான பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் கட்டியினால் இந்த நிலை ஏற்படுகிறது.   பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டி மூளையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, இல்லாத விஷயங்களை மனிதர்கள் பார்க்கவும் கேட்கவும் ஆரம்பிக்கிறார்கள். சந்தேக நோய்த்தனமான குணாதிசயங்களால் ஆன தொடர்ச்சியான மாய தோற்ற பாதிப்பு என்பதுதான் முஹம்மதின் வன்முறையை நாடும் மனநோய் நிலையை பற்றிய சோமர்சின் நோய் ஆராய்ச்சி முடிவு ஆகும்.

சந்தேகநோய்த்தனமான மாயதோற்ற மனசிதைவு நோய் (paranoid hallucinatory schizophrenia) யை பற்றி ஜெர்மானிய மருத்துவ வரலாற்றாசிரியர் அர்மின் ஜியஸ் (Armin Geus) பேசுகிறார். இதை போன்ற ஒரு பகுப்பாய்வு டெடெ கோர்குட் (De de Korkut) என்ற மருத்துவரால் எழுதப்பட்ட “முஹம்மதின் மருத்துவ வரலாறு”(The Medical Case of Muhammad)  என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

“முஹம்மதின் உளவியல் : நபியுடைய மூளையின் உள்ளே” – Psychology of Muhammad : Inside the Brain of a Prophet என்ற தன்னுடைய புத்தகத்தில், “அதிகாரத்தில் இருந்த வன்முறை மனநோயாளியின் பரிபூரண உருவகம்” என்று முகம்மதை டாக்டர் மசூத் அன்சாரி அழைக்கிறார். முஹம்மது அதிகார வெறி நாட்டங்களும், தாழ்வு மனப்பான்மையும், மனரீதியில் தடுமாற்றம் கொண்ட சந்தேக மனநோய் குணாதிசயத்தை கொண்டிருந்தார். தனக்கு பிரபஞ்ச பணி (cosmic mission) இருப்பதாகவும் தன்னை தடுக்க எதுவும் இல்லை எனவும் நம்பும்படி அவரை வழிநடத்தி செல்கின்ற காட்சிகளை (visions) அவர் தன்னுடைய நாற்பதுகளில் காண தொடங்கினார்.

உண்மை எப்பொழுதும் இனிமையாகவோ அல்லது அரசியல் ரீதியாக சரியானதாகவோ இருப்பதில்லை. நெதர்லாந்தில் வாழும் பத்து லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் உள்ள நூற்று ஐம்பது கோடி மக்கள்  முகம்மதை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்ப்டி   இஸ்லாமிய மதம் கடமையாக்குகிறது என்று மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் வாதிட முடியும்.

ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு திரும்பி செல்வது என்பதே கிடையாது. ஏனெனில் “தன்னுடைய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ மாற்றிக்கொள்வதற்கு” ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின் 18 வது பிரிவு கூறினாலும் கூட, நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.

இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் – நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது.  முஹம்மதின் உண்மையான இயல்பையும்  குணத்தையும்  பற்றிய வெளிப்படையான விவாதம்  இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த  மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம்.

————————————————————————————————————

கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். “HP/De Tijid” என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.

மொழி பெயர்ப்பு : ஆனந்த சாகர்

முகம்மதுவும் ஆயிஷாவும்

Posted on Updated on

உங்கள் கவனத்திற்கு

52 வயது முஹம்மது 6 வயது குழந்தையான ஆயிஷாவை திருமணம் செய்ததையும் முஹம்மதின் சுகாதாரமற்ற பழக்கங்களையும் கேலி செய்து ஆயிஷாவின் தந்தையான அபூபக்கருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே நடந்ததாக ஒரு கற்பனை உரையாடலை ஆயிஷா அஹ்மத் என்பவர் ஆங்கிலத்தில் எழுதி http://www.islam-watch.org   என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதன் கீழே வெளியிடப்படுகிறது. இது ஒரு கற்பனை உரையாடல் என்ற போதிலும் அதில் நையாண்டி செய்யப்பட்டுள்ள விஷயங்களுக்கு இஸ்லாமிய மூல நூல்களான ஹதீத்களில் இருந்து ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

திருமதி.அபு பக்கர் : அபு, உங்களுடைய விசித்திரமான நண்பர் இங்கு தினமும் வருவதை நான் விரும்பவில்லை.

அபு பக்கர் : ஏன்?

திருமதி.அபு பக்கர் : அவர் குட்டி ஆயிஷாவை பிடித்து தன்னுடைய மடியில் வைத்து  அணைத்து  முத்தமிடுகிறார்.

அபு பக்கர் : பைத்தியக்காரி, அவர் அவளுடைய தாத்தா வயதுடையவர், அவர் குழைந்தைகளை நேசிக்கிறார், அவ்வளவுதான்.

திருமதி.அபு பக்கர் : அவர் குழைந்தைகளை நேசிக்கிறாரா அல்லது அவர்களுடன் சல்லாபம் செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.

அபு பக்கர் : மடத்தனமாக என்ன பேசுகிறாய்? கடவுள் நிமித்தம், அவர் குர் ஆனை தன்னுடைய மார்பிலே வைத்திருக்கிறார்.

திருமதி.அபு பக்கர் : குர்ஆன் அவருடைய மார்பில்தான் இருக்கிறது, அவருடைய கால்களுக்கு இடையில் இல்லை. எப்படியிருந்தாலும், என்னுடைய குட்டி மகளின் அருகில் அவர் வருவதை நான் விரும்பவில்லை. அவர் அவளை தழுவும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு பேன்களை கொடுத்து விடுகிறார். அவருடைய தாடியிலும் பேன்கள் இருக்கின்றன.

புஹாரி, வால்யூம் 9, நூல் 87, எண் 130 :

அல்லாஹ்வின் தூதர் உம் ஹரம் பின்த் மில்ஹான் என்பவரை சென்று பார்ப்பது வழக்கம்.  அவள் உபைதா பின் அஸ் சமித் என்பவரின் மனைவி. ஒரு நாள், நபி அவளை சென்று பார்த்தார். அவள் அவருக்கு உணவளித்து அவருக்கு தலையில் பேன் பார்த்தாள்.

அபு தாவூத், நூல் 19, எண் 3074 :

உத்மான் இப்னு அப்பானின் மனைவியும் ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களும் அவருடன் இருந்தபொழுது, அவள் அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாவதாக) தலையிலிருந்து பேன்களை பொறுக்கி எடுத்தாள் .

அபு பக்கர் : பெண்ணே, அல்லாஹ்வுடைய நபியை பற்றி அப்படியெல்லாம் நீ பேச கூடாது. இதுவரை வாழ்ந்தவர்களிலேயே அவர் தான் மிகப்பெரிய மனிதர்.

திருமதி.அபு பக்கர் : அவர் அவ்வளவு பெரியவராக இருந்தால், குப்பைகளும்  மாத விலக்கு ரத்தங்களும்  உள்ள குட்டையில் ஏன் செத்த நாய்களுடன் அவர் நீச்சல் அடிக்கிறார்?

அபு பக்கர் : நீ எதை பற்றி பேசுகிறாய்?

திருமதி.அபு பக்கர் : புத்ஆ கிணற்றில் நேற்று குப்பை கொட்டுவதற்காக சென்றேன். அழுக்கு பிடித்த நாற்றமெடுக்கும் தண்ணீரில் அவர் மேலும் கீழுமாக குதித்து கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார். அழுக்கு தண்ணீரில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் அவரை கேட்டேன். இந்த தண்ணீர் சுத்தமானது என்று அவர் கூறினார். இத்தனை செத்த நாய்களும் மாத விலக்கு ரத்தம் தோய்ந்த துணி கந்தைகளும் குப்பைகளும் உள்ள அந்த தண்ணீர் எப்படி சுத்தமாக இருக்கும் என்று நான் சொன்னேன். எந்த ஒன்றுமே தண்ணீரை அழுக்காக ஆக்காது என்று அவர் கூறினார். பிறகு அவர் சிறிது நீரை குடித்துவிட்டு, ஒளு செய்து, மக்ரிப் தொழுகையை முன்னின்று நடத்த  சென்றார். அவர் இவ்வளவு துர்நாற்றமடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நேற்று இரவு, அவர் அவளை  தன்னுடைய மடியில் உட்கார வைத்தபோது ஆயிஷா வாயை துணியால் மூடிக்கொண்டு தூரமாக விலகி இருந்தார்.

அபு தாவூத், நூல் 1, எண் 0066 :

அபு சயித் அல்-குத்ரி விவரித்தார் :

மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம்(அவர் மீது சாந்தி நிலவட்டும்) கேட்டார்கள் : மாத விலக்கு துணிகளும் செத்த நாய்களும் துர்நாற்றமெடுக்கும் பொருட்களும் வீசி எறியப்பட்டுள்ள கிணறான, புத்ஆ(Buda’ah) கிணற்றின் தண்ணீரைக் கொண்டு ஒளு செய்யலாமா? அவர் பதிலுரைத்தார் : தண்ணீர் சுத்தமானது, எதினாலும் அசுத்தமாகாது. 

அபு தாவூத், நூல் 1, எண் 0067 :

அபு சயித் அல்-குத்ரி விவரித்தார் :

நான் கேள்விபட்டேன், மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம்(அவர் மீது சாந்தி நிலவட்டும்) கேட்டார்கள் : புத்ஆ(Buda’ah) கிணற்றிலிருந்து உங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. செத்த நாய்களும் மாத விலக்கு துணிகளும் மக்களின் மலமும் எறியப்படுகிற கிணறு அது. அல்லாஹ்வின் தூதர்  (அவர் மீது சாந்தி நிலவட்டும்) பதிலுரைத்தார் : நிச்சயமாக தண்ணீர் சுத்தமானது, எதினாலும் அசுத்தமாகாது. 

தப்ஸீர் குர்துபி, அத்தியாயம் வால்யூம் 13, பக்கம் 51 :

” நபியவர்கள் புத்ஆ கிணற்றின் அழுக்கு தண்ணீரை குடித்து, அதைக்கொண்டு ஒளு செய்தார்கள்”.

(செத்த நாய்களும் குப்பைகளும் மாத விலக்கு  ரத்தங்களும் உள்ள புத்ஆ கிணற்றின் தண்ணீரில் நபி(ஸல்)  குளித்தது, குடித்தது, ஒளு செய்தது போன்றவற்றுக்கான  மற்ற குறிப்புகளுக்கு,   முஸ்லிம் அறிஞருக்கும்  அரபி கிறிஸ்தவருக்கும்  இடையே நடந்த கீழ்க்கண்ட விவாதத்தின் கடைசி பகுதியை கேளுங்கள் :

http://video.google.com/videoplay?docid=-7162436352561262986&hl=en

அபு பக்கர் : பெண்ணே, அல்லாஹ்வுடைய அற்புதத்தை நீ பார்த்தாயே, உனக்கு புரியவில்லையா? நீயும் நானும் புத்ஆ கிணற்று நீரை குடித்தால், நாயை போன்று நோய்வாய்ப்பட்டு,  இறந்து கூட போகலாம். ஆனால் முகம்மதுவுக்கு ஒன்றுமே நேர்வதில்லை. அவர் அல்லாஹ்வின் நபி என்பதை அது நிரூபிக்கவில்லையா?

திருமதி.அபு பக்கர் : இல்லை, அவர் ஒரு மறை கழண்ட ஆள் என்பதையே அது நிரூபிக்கிறது. நம்முடைய மகளுக்கு அருகில் அவரை நாம் அனுமதிக்க கூடாது.

அபு பக்கர் : அதற்கு மிகவும் காலம் கடந்து விட்டது. அவளுடைய கையை பிடித்து தருமாறு இன்று அவர் என்னிடம் கேட்டார். நானும் ஏற்றுக்கொண்டு  விட்டேன்.

திருமதி.அபு பக்கர் : அட கிறுக்கு பிடித்த  கிழவனே, நீ  ஏன் முடியாது என்று சொல்லவில்லை? முஹம்மது கிறுக்கர் மட்டுமல்ல, அவர் அவளுடைய தாத்தா வயதுடையவர்.

அபு பக்கர் :  நான் அப்படி தான் சொன்னேன். ஆனால் அவைகள் அல்லாஹ்வுடைய ஆணைகள், அவர் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறினார். நான் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. அல்லாஹ்வை கோபமடைய செய்து நரக நெருப்பில்  போய் முடிவடைய நான் விரும்பவில்லை.

திருமதி.அபு பக்கர் : அவர்  புத்ஆ நீரில் குளித்த பிறகோ அல்லது ஒளு செய்த பிறகோ ஆயிஷாவின் அருகில் வரக்கூடாது என்று குறைந்த பட்சம் ஒரு திருமண நிபந்தனையாவது உன்னால்  போட முடியுமா?

மூல ஆசிரியர் : ஆயிஷா அஹ்மத்(27 Mar, 2009)

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்